முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசி உள்ளிட்ட புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தென்காசி உள்ளிட்ட புதிதாக அமைக்கப்பட இருக்கும் மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலியை பிரித்து தென்காசி மாவட்டம், வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டமும் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

உள்ளாட்சித்தேர்தலுக்கு அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் சூழ்நிலையில் இந்த புதிய மாவட்டங்களில் இடம் பெற்றிருக்கும் தாலுகாக்கள் குறித்த அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் புதிய மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கலெக்டராக கிரண்குராலா நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் புதிதாக அமைக்கப்பட இருக்கும் தென்காசி கலெக்டராக ஜி.கே. அருண்சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜான் லூயிஸ், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக எம்.பி. சிவனருள், ராணிப்பேட்டை கலெக்டராக திவ்யதர்சினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து