முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஓராண்டுக்கு வழங்குகிறார் பிபின் ராவத்

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், தனது மாத சம்பளத்தில் இருந்து, அடுத்த ஒராண்டிற்கு ரூ.50 ஆயிரத்தை வழங்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதன்படி ஒரு மாதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்காக உருவாக்கப்பட்ட பி.எம். கேர்ஸ் நிதிக்கு அனைவரும் நிதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி பலரும் நிதி அளித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை நிவாரணமாக அளித்தனர்.

இதனை தொடர்ந்து, பிபின் ராவத், அடுத்த ஒராண்டிற்கு, தனது மாத சம்பளத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் பிடித்து கொள்ளும்படி , கடந்த மார்ச் மாதம், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். இதனை ஏற்று கொண்டு, ஒரு மாத சம்பளம் பிடித்தம் செய்து, அது 'பிஎம்கேஸ்' நிதியில் சேர்க்கப்பட்டதாக பதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள், ஒராண்டிற்கு, மாத சம்பளத்தில், ஒரு நாள் சம்பளத்தை, 'பிஎம்கேர்ஸ்' நிதிக்கு தாமாக முன்வந்து வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து