எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை எழிலகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒவ்வொருஆண்டும் எதிர்கொள்ளும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் கடந்த 12ம் தேதி தலைமை செயலாளர் உள்பட அனைத்து துறை செயலாளர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
வெள்ளம் வருமுன்பு, வந்த பின், வெள்ளம் வடிந்த பின்னர் ஆகிய 3 நிலைகளில் என்னென்ன நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
1076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தமிழக கடற்கரை, இந்தியா அளவில் 18 சதவீதம் கடலோர பகுதியை தமிழகம் கொண்டுள்ளது. சூறாவளி, வறட்சி, புயல் என ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வருகிறோம்.
அதே போன்று நிலச்சரிவு, கடல் அலை, கடல் அரிப்பு, இடி, மின்னல் என பருவமழை காலங்களில் நடைபெறும் நிகழ்வுகளை கடந்த 30 ஆண்டுகால பேரிடர் கால அனுபவங்களை கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகப்படியான மழை கிடைக்கப்பெறுகிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து, இதன் மூலம் 47.32 சதவீதம் மழை அளவு கிடைக்கிறது.
இந்த மழையை சேமித்து வைத்து குடிநீர் மற்றும் விவசாயம் போன்ற பணிகளுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் குடிமாமரத்து பணிகள்மூலம் பணிகள்மேற்கொள்ளப்பட்டு, மழைநீரை சேமித்து வைக்க ஆய்த்தமாக உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள ஆணைகள்,ஏரிகள் எனஅனைத்து நீர்நிலைகளையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், மாநிலத்தில் மொத்தம் 4133 பகுதிகள் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன.அதில் 321 பகுதிகள் மிகவும் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் எனவும், 797 பகுதிகள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதி எனவும், 1096 பகுதிகள் மிதமான பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் எனவும், 1919 பகுதிகள் குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிப்பிற்குள்ளாகும் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளுக்கு முறையே குறுவட்ட மற்றும் வார்டு அளவில், பாதிப்பின் தன்மை குறித்தஆய்வு, பேரிடர் காலத்தில் காத்துக் கொள்ள வெளியேறும் வழி மற்றும் நிவாரணமையங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை அளித்திடவும், தேடுதல், மீட்பு, பாதிப்பிற்குள்ளாகும் பருதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில்தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வாகிக்கவும்662 பல்துறை மண்டலக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தப்படி. 1000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் அனைத்துமாவட்டங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, ஊர்க்காவல் படையினைச் சார்ந்த 691 நபர்களும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினரால் பயிற்சி அளிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
4,699 தீயணைப்பு வீரர்கள், 9859 பாதுகாக்கும் தன்னார்வலர்களும் பயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,094 கல்விநிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றிட 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் தயார்நிலையில் உள்ளனர். இவர்களில் 14,232 மகளிர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8,871 முதல் நிலை மீட்பாளர்கள் தயார்நிலையில் உள்ளனர்.
பேரிடர் காலங்களில் பலத்த காற்றினால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்காகவும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நடவதற்கும் 9,909 முதல்நிலை மீட்பாளர்கள் தயாராக உள்ளனர். அதுமட்டுமின்றி பாம்பு பிடிக்கும் திறன்உடையவர்கள், நீரில் மூழ்குபவர்களை காப்பாற்ற நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டங்களில் 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 ஜேசிபி இயந்திரங்கள், 2115 ஜெனரோட்டர்கள் மற்றும் 483 அதிக திறன்கொண்ட பம்பு செட்கள், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளன.
தற்போது முன்னெச்சரிக்கையாக மழை மற்றும் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களைமாற்றுஇடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்புமையங்கள் உட்பட 4713 தங்கும் மையங்களில் 7,39,450 நபர்களை தங்க வைக்க தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளி கடைபிடிக்கவும், முககவசம், கைகளை சுத்தம் செய்வது போன்ற பாதுகாப்பு மையங்களில் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி பள்ளிகள், திருமணமண்டபங்கள் மற்றும்சமுதாய கூடங்கள் என 4680 தங்கும் இடங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல், சூறாவளி காலத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவுரைகள்அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடந்த 26.8.2020 அன்றுஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று மின்னல் தாக்கத்தின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றை உள்ளடக்கிய 2020 செயல்திட்டம் கடந்த 1.9.2020 அன்று மாவட்ட கலெக்டர்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைநடவடிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர், அனுபவமிக்க ஐஏஎஸ் அதிகாரிகள்கொண்ட குழு மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் மக்கள் ஒத்துழைப்பு, விழிப்புணர்வு மிக அவசியம், நீர் திறந்துவிடும் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில்உள்ள மக்கள் எச்சரிக்கையாக முகாம் தங்கி கொள்ள வேண்டும். மேலும் பழைய வீடுகளில் உள்ளவர்கள்தங்களது வீடுகளின்உறுதி தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தற்போது கொரோனா காலகட்டம் என்பதால்மிகுந்தமுன்னெச்சரிக்கையுடன் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தங்கும்மையங்களில் அரசினவழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறைந்தஅளவு மட்டுமே நபர்களை தங்கவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிவறைகள், மருத்துவ முகாம்கள், தங்கும் மையங்கள் ஆகியவை கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளஅனைத்து வகையிலும் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது .இவ்வாறு அவர்கூறினார்,.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 day 12 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்5 days 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 1 day ago |
-
தொடர் மழை: ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து
23 May 2024ஊட்டி, தொடர்மழை காரணமாக தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை நேற்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
-
பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து பயன்படுத்தும் புதுவை முதல்வர்
23 May 2024புதுச்சேரி, தனது பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து புதுவை முதல்வர் பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
-
பணி நேரத்தை முறையாக கடைபிடிக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு
23 May 2024சென்னை:ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
23 May 2024பெங்களூரு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-05-2024.
23 May 2024 -
மெக்சிகோவில் பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு
23 May 2024மெக்சிகோ, மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
தைவானை சுற்றி சீனா திடீர் போர்ப் பயிற்சி
23 May 2024பெய்ஜிங், தைவானை சுற்றி சீனா நேற்று காலை திடீரென 2 நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
குற்றால அருவியின் மேல் பகுதியில் அண்ணா பல்கலை.யின் பேராசிரியர் குழு ஆய்வு
23 May 2024தென்காசி, திடீர் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், வெள்ளப் பெருக்கை முன்கூட்டியே கண்காணிக்கவும் நவீன சென்சார் கருவிகளை பொருத்த வனத்துறை உதவியுடன் குற
-
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்கியது: 63,433 பேர் இடமாற்றம் கோரி விண்ணப்பம்
23 May 2024சென்னை, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் ஜூன் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
23 May 2024நெல்லை, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
கன்னியாகுமரி கடற்கரையில் பகவதியம்மனுக்கு ஆறாட்டு
23 May 2024குமரி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை திரிவேணி சங்கம கடற்பகுதியில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது.
-
கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் ஏழைகளுக்காக எதுவும் செய்யவில்லை: பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு
23 May 2024புது டெல்லி, கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் மோடி ஏழைகளுக்காக எதுவும் செய்வதில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
சென்னையை தொடர்ந்து சம்பவம்: கோவையில் நாய் கடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை
23 May 2024கோவை, கோவை அருகே வளர்ப்பு நாய் கடித்து 10 வயது சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மே மாத இறுதிக்குள் 5 ஏ.டி.எம். மையங்கள் பயன்பாட்டுக்கு வரும்: சி.எம்.டி.ஏ. அறிவிப்பு
23 May 2024சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இந்த மாத இறுதிக்குள் 5 ஏ.டி.எம்.
-
கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாசார மையம் கட்ட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 May 2024சென்னை, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில், கலாசார மைய கட்டுமான பணிகளை வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் படிக்க சேர்க்கை ஆணை: மாணவிக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
23 May 2024சென்னை, சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி ஷரினாகிறிஸ்டுக்
-
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாக். அரசு திட்டம்
23 May 2024இஸ்லாமாபாத், நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு உள்ளது.
-
இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல்: ரிஷி சுனக் அறிவிப்பு
23 May 2024லண்டன், இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
-
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: ரோடுஷோவில் பிரியங்கா குற்றச்சாட்டு
23 May 2024சண்டிகர், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
-
குருவை ஏமாற்றியவர் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்? ராஜ்நாத் சிங் கேள்வி
23 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அவரது குரு அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர். அவர், எப்படி மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்?
-
நான், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலாளி: அரியானாவில் பிரதமர் மோடி பேச்சு
23 May 2024சண்டிகர், நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என தெரிவித்த பிரதமர் மோடி, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலாளி
-
தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன: பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்
23 May 2024சென்னை, கனமழை காரணமாக தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
-
முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்டுவது சட்டவிரோதமானது: செல்வப்பெருந்தகை கண்டனம்
23 May 2024சென்னை, முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் மத்திய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியிருப்பதாக வந்திருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை
-
ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மம்தா கடும் எதிர்ப்பு
23 May 2024கொல்கத்தா, 37 பிரிவினருக்கு வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
வங்கக்கடலில் நாளை உருவாகிறது ரீமால் புயல்: தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
23 May 2024புதுடெல்லி, வங்கக்கடலில் உருவாக உள்ள தீவிர புயலுக்கு ரீமால் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், வருகிற 26ம் தேதி இந்த புயல் மேற்குவங்காளத்திற்கு அருகே கரையை கடக்கும் என