முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து பிரச்சினைகளையும் மன்மோகன்சிங்கிடம் விவாதித்தேன் பாக். பிரதமர் கிலானி

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஏப்- .4 - காஷ்மீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விவாதித்தேன் என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி தெரிவித்துள்ளார்.  இந்திய பிரதமரின் அழைப்பின் பேரில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி, மன்மோகன்சிங்கிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மன்மோகன்சிங்கை சந்தித்த போது இரு நாடுகளிடையே உள்ள அனைத்து முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தேன். காஷ்மீர் விஷயம் குறித்தும் பேசப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை. நமது பிரச்சினைகள் என்ன என்பது நமக்கு மட்டும்தான் தெரியும் என்றார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்