எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மில்கா சிங்கிற்கு அர்ப்பணிப்பு
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில் , ''நான் தங்கப் பதக்கத்தைப் பற்றி நினைக்கவில்லை. தனிப்பட்ட ரீதியாக எனது சிறப்பான ஆட்டத்தை வழங்குவேன் என்று நன்கு தெரியும். இந்தப் பதக்கத்தை தடகள நட்சத்திரம் மில்கா சிங்கிற்கு அர்ப்பணிக்கிறேன். தங்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது.'' என்று தெரிவித்துள்ளார்.
_________
விடைபெற்றார் மெஸ்சி
34 வயது நிரம்பிய மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 34 டிராபிகளையும் பெற்றுத் தந்துள்ளார். 6 முறை பலோன் டி ஓர் விருதை வென்றுள்ளார். மெஸ்சியின் ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், அடுத்த சில வருடங்களுக்கு மெஸ்சியை தக்க வைத்து கொள்ள பார்சிலோனா கிளப் தயராக இருந்தது. இதற்கான ஒப்பந்தமும் தயாராகின. ஆனால் நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
இதனால் பார்சிலோனா அணிக்கான மெஸ்சியின் பயணம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மெஸ்சி நேற்று பார்சிலோனா கிளப்புக்கு சொந்தமான கேம் நவ் ஸ்டேடியத்தில் செய்தியாளர்களை சந்தித்தித்தார். அப்போது, பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதை உறுதி செய்தார். அணியில் இருந்து விலகுவதாக அவர் கூறியபோது கண்களில் கண்ணீர் பெருகியது.
___________
தமிழக வீராங்கனை ரேவதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தாயகம் திரும்பிய மதுரை வீராங்கனை ரேவதி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது., எனது நான்கு ஆண்டு கனவாக இருந்த ஒலிம்பிக் கனவு நிறைவேறியிருக்கிறது.
டோக்கியோவில் இந்தியாவிற்காக களமிறங்கும் போது எனது கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்றது பெருமையாக இருந்தது. சிறிய தவறினால் பதக்க வாய்ப்பை தவற விட்டேன். இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து இந்தியாவுக்காக பதக்கம் பெற வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருக்கிறது என்றார்.
_________
ஆஸி.க்கு முதல் வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் வெற்றியாகும்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் அடித்து வென்றது. ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்வெப்சன் ஆட்டநாயகன் ஆனார்.
__________
ஜூலை மாத சிறந்த வீரர்கள்
ஜூலை மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பெயரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பரிந்துரைத்துள்ளது. ஆடவர் கிரிக்கெட்டில் வங்கதேசத்திலிருந்து ஷகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவிலிருந்து மிட்செல் மார்ஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து ஹேடன் வால்ஷ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் கிரிக்கெட்டிலிருந்து ஹேலே மேத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), ஃபாதிமா சனா (பாகிஸ்தான்) மற்றும் ஸ்டெஃபானி டெய்லர் (மேற்கிந்தியத் தீவுகள்) ஆகியோர் ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் யார் வெற்றியாளர்கள் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.
__________
ஏமாற்றமளிக்கிறது - புனியா
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டியில், 65 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. இந்நிலையில் அவர், தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக கூறியிருக்கிறார்.
2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முயற்சிப்பேன் என்றும் அவர் கூறினார். மேலும், "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை, அன்பு மற்றும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று கூறினார்.
____________
நீரஜ் சோப்ரா: பி.டி.உஷா பெருமிதம்
தமது 37 ஆண்டுகால கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றியுள்ளதாக, இந்தியாவின் தங்க மகள் என போற்றப்படும் என முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 37 ஆண்டுகளுக்கு முன்பு நிவர்த்தி ஆகாத தமது கனவு தற்போது நனவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 'நன்றி மகனே' என்றும் மனமுருக அவர் பதிவிட்டுள்ளார்.
1984 லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நூல் இழையில் பதக்கத்தை பிடி உஷா தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், துப்பாக்கி சுடுதல் போட்டியில் தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவும், தனது ட்விட்டர் பக்கத்தில் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
___________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.