எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. இந்த ஆட்டம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கே வருகை தரும் எம்.எஸ். டோனிக்கு எதிரணி என்று பார்க்காமல் லக்னோ அணி நிர்வாகம் சார்பில் முக்கிய இடங்களில் சாலை ஓரங்களில் பெரிய பேனர்கள் வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு பேனரில் "எங்களுக்கு டோனி சிறப்பாக விளையாட வேண்டும். அதே சமயம் போட்டியில் லக்னோ வெற்றி பெற வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு பேனரில் "எங்களுக்கு கடைசி பந்தில் டோனி சிக்சர் அடிக்க வேண்டும். ஆனால் அப்போது வெற்றி பெறுவதற்கு கடைசி பந்தில் 12 ரன்கள் தேவையாக இருக்க வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த 2 பேனர்களின் அடியில் "34வது லீக் போட்டி என்பது 3 மற்றும் 4 சேர்ந்த 7வது நம்பரை குறிக்கிறது. அதற்கு காரணம் தல (டோனியின் ஜெர்சி எண்)" என்றும் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் எதிரணியாக இருந்தாலும் டோனி நன்றாக விளையாட வேண்டும் என்று மிகவும் மதிப்பளித்து லக்னோ நிர்வாகம் கொடுத்துள்ள இந்த வரவேற்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
_____________________________________________________
பஞ்சாப் வீரருக்கு பாராட்டு
ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 19.1 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பஞ்சாப் அணி வீரர் ஆசுதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் அடித்து மும்பைக்கு பயத்தை காட்டினார். இதில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் பும்ராவின் யார்க்கர் பந்தினை ஸ்வீப் ஷாட் அடித்தார். இந்த சிக்ஸரை குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பஞ்சாப் அணிக்கு ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் விளையாடிய நான்கு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார். 4 போட்டிகளில் 156 ரன்கள் 205 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். சராசரி 52 என்பது குறிப்பிடத்தக்கது. ஆசுதோஷ் சர்மாவின் ஐபிஎல் இன்னிங்ஸ்: குஜராத் அணிக்கு எதிராக 31 (17), சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 33* (15).ராஜஸ்தான் அணிக்கு எதிராக 31 (16), மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 61 (28)
_____________________________________________________
பும்ராவுக்கு இயன் பாராட்டு
நடப்பு ஐ.பி.எல்.லில் மும்பையின் இந்த 3 வெற்றிக்கும் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவே காரணம் என்று சொல்லலாம். அந்த அணியின் மற்ற பவுலர்கள் எல்லாம் ரன்களை வாரி வழங்கி வர, அவர் மட்டுமே சிக்கனமாக பந்து வீசுவது மட்டுமின்றி முக்கியமான தருணங்களில் விக்கெட்டும் வீழ்த்தி வருகிறார். குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா, நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் 3 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தி அணி வெற்றி பெற உதவினார். இதன் மூலம் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் வேகப்பந்து வீச்சில் பிஎச்டி என்னும் பட்டம் இருந்தால் அதை பும்ராவுக்கு கொடுக்கலாம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இயன் பிஷப் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. "ஒருவேளை ஜஸ்பிரித் பும்ராவை "வேகப்பந்து வீச்சாளர் பிஎச்டி" எனும் பட்டத்தின் வாயிலாக அபிஷேகம் செய்ய முடிந்தால் அதை நான் செய்வேன். அவர் ஒரு அற்புதமான பவுலர். பல்வேறு நாடுகளில் அனைத்து மட்டங்களிலும் ஆர்வத்துடன் இருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவர் பந்து வீச்சு பற்றிய விரிவுரைகளை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்காக அவர் ஓய்வு பெறும் வரை நான் காத்திருக்க மாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.
_____________________________________________________
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக ஆடிய கேப்டன் ஹேலி மேத்யூஸ் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால், துபா ஹாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 270 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 35.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 113 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துபா ஹாசன் 25 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.
_____________________________________________________
வருத்தம் அளிக்கிறது: சாம் கர்ரன்
மும்பைக்கு எதிரான தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒரு போட்டியை நெருங்கி வந்து தோற்றுள்ளோம். இந்த ஆட்டம் மிக நெருக்கமாக வந்தது. ஆனாலும் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது வருத்தம் அளிக்கிறது. அசுதோஷ் சர்மாவின் ஆட்டம் இந்த போட்டியிலும் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பாக இருந்தது. உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது போன்ற நெருக்கமான போட்டிகளில் தோல்வியை சந்தித்தால் அதை ஏற்றுக்கொள்ள நேரம் பிடிக்கும். ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் முழு அர்ப்பணிப்புடன் போராடினர். அவர்களது நம்பிக்கை நம்ப முடியாத வகையில் இருந்தது.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கூட அசுதோஷ் சர்மா ஸ்வீப் ஷாட்டுகளின் மூலம் பெரிய பெரிய சிக்ஸர்களை அடிக்கிறார். அவரது ஆட்டத்தை பார்க்க நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்ததில் வருத்தமே. எங்களது அணியில் உள்ள சில குறைகளை நீக்கிவிட்டு நாங்கள் தேவையான இடத்தில் எங்களை பலப்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி பாதைக்கு திரும்ப முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 18 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்4 days 14 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 1 day ago |
-
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் பலி
19 May 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 May 2024சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம் நாளை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
19 May 2024நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன்
19 May 2024தென்காசி : குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு 85 பஸ்கள் தினசரி இயக்கம்
19 May 2024சென்னை : கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம்
19 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
நிறைவு பெற்றது ஊட்டி மலர்க்கண்காட்சி: ஆர்வமுடன் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 May 2024ஊட்டி : ஊட்டியில் மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து பூக்களை கண்டுகளித்தனர்.
-
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
19 May 2024புதுடெல்லி : மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரளம் முயற்சி: சட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
19 May 2024சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் மீது தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 May 2024மதுரை : அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
-
மழை எச்சரிக்கை: ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து
19 May 2024நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&n
-
டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் : கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
-
ஆம் ஆத்மி கட்சிக்கு நான் வாக்களிக்க போகிறேன் : பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு
19 May 2024புதுடெல்லி : இந்த தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் சுவாரசியமாக இருக்கும் என்று டெல்லியில் பிரச்சாரம் மேற்க
-
வைகாசி மாத பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
19 May 2024விருதுநகர் : வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் ச
-
கனமழை எச்சரிக்கை : குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 9 குழுக்களில் 296 படை வீரர்கள் முகாம் : 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்
19 May 2024சென்னை : வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து குமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 296 பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய 9 குழுக
-
பெங்களூருக்கு எதிரான தோல்விக்கு காரணம்: கெய்க்வாட் விளக்கம்
19 May 2024பெங்களூரு : அந்த 3 வீரர்களும் இல்லாததுதான் இந்த சீசனில் எங்கள் தோல்விக்கு காரணம் என்று சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பரவலாக கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
19 May 2024சென்னை : தமிழகத்தில் திருவாரூர், திருவள்ளூர், நாகை, சீர்காழி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டிவி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார்
19 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர
-
மதுரை மாவட்ட தேவைக்காக நாளை முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
19 May 2024மதுரை : மதுரை மாவட்ட தேவைக்காக நாளை 21-ம் தேதி முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : பாதுகாப்பு பணியில் படைவீரர்கள்
19 May 2024லக்னோ : 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
-
பஞ்சாபை வீழ்த்தியது ஐதராபாத்
19 May 2024ஐதராபாத் : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.
நடராஜன்....
-
ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு
19 May 2024புதுடெல்லி : டெல்லிக்காக நான் செய்த பணிகளை மதிப்பிட்டு வாக்களியுங்கள் என தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்ப
-
ஜடேஜா, டோனி போராட்டம் வீண்: 4-வது அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு பெங்களூரு தகுதி
19 May 2024பெங்களூரு : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
-
கொளுத்தும் கோடை வெயில்: டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் உச்சபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் கடத்தி வரப்பட்ட ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : முதல்வர் பிஸ்வா சர்மா தகவல்
19 May 2024திஷ்பூர் : அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.