முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லு அப்பீல்: சி.பி.ஐ. கோர்ட்டுக்கு ஜார்கண்ட் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

ராஞ்சி, அக். 19 - ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத் யாதவுக்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது தெரிந்ததே. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று லல்லு பிரசாத் வழக்கறிஞர் கூறியிருந்தார். அதன் படி நேற்று முன்தினம் ஜார்கண்ட் நீதிமன்றத்தில் லல்லு தரப்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் லல்லு பிரசாத் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்று சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ஏற்று ஜார்கண்ட் நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ. நீதிமன்றம் ஒப்படைக்கும் என தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்