எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.24 - சேலம் மாவட்டம் சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவுச் சின்னம் காணொலி காட்சியின் மூலம் முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் திறந்து வைத்தார். அதன்பின் வாஞ்நாதனுக்கு மணிமண்டபத்தை திறந்து வைத்து ஓமந்தூரார் அரசின் தோட்டத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_
முதல்வர் ஜெயலலிதா நேற்று (23.12.2013) தலைமைச் செயலகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான சேலம் மாவட்டம், சங்ககிரியில்
60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தை திறந்து வைத்து, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மாவீரர் தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போர் செய்த பெருமைக்குரியவர். சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே வாழ்ந்த ஒரு சின்னமலை என்று புகழப்பட்டவர். தனக்கென ஒரு பாதை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் முதல்வர்
ஜெயலலிதாவால் 1995_ஆம் ஆண்டு தீரன் சின்னமலைக்கு தமிழக அரசின் சார்பில், ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் நினைவு விழா நடத்தப்பட்டு, அவ்விழாவில் அவரது வாரிசுகள் கௌரவிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் நினைவு நாளான, ஆடி மாதம் 18_ஆம் நாளினை அரசு விழாவாக அனுசரிக்க 2003_ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும், தியாகி தீரன் சின்னமலையின் நினைவைப் போற்றும் வகையில் 30 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணிமண்டபத்தை 2006_ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலை பொலிவிழந்தும் அதன் பீடம் மற்றும் சுற்றுப்புறத் தரை மிகவும் சிதிலமடைந்தும் இருந்ததை சீர்செய்து 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலை வளாகம் மற்றும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு விவரங்கள் அடங்கிய பலகை ஆகியவற்றை 17.4.2013 அன்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா 4.4.2012 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடமான சேலம் மாவட்டம், சங்ககிரியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்து 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.
அதன்படி, சேலம் மாவட்டம் சங்ககிரியில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் 1886_ம் ஆண்டு பிறந்த புரட்சியாளர் வாஞ்சிநாதன், கல்லூரிப் படிப்பு முடிந்து, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வனத் துறையில் பணியாற்றி வந்த போது சுதந்திர போராட்ட வீரர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் கவரப்பட்டு விடுதலை போராட்டத்தில் ஐக்கியமானார். தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நீலகண்ட பிரம்மச்சாரியுடன் இணைந்து பாரதமாதா சங்கம் என்ற புரட்சி அமைப்பில் சேர்ந்தார். 1911 ஜூன் மாதம் 17_ஆம் நாள் மணியாச்சி புகைவண்டி நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஆழ துரையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைந்தார்.
தமிழக அரசின் சார்பில், நாட்டு விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த வாஞ்சிநாதன் நினைவைப் போற்றிடும் வகையில், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர்
ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
சென்னை மாநகரின் குறிப்பிடத்தக்கதொரு அடையாளமாக திகழ்ந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்திருந்த கலைவாணர் அரங்கத்தின் முக்கியத்துவத்தையும், தேவையையும் நன்கறிந்த முதல்வர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 25.4.2012 அன்று, "சென்னையில் இருந்த கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டு, தற்போது காலியாகவுள்ள அந்த இடத்தில் விரைவிலேயே இந்த அரசு ஒரு பிரமாண்டமான கலை அரங்கம் கட்டும்'' என்று அறிவித்தார். மேலும், இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 61 கோடி ரூபாய் செலவில் புதிய கலை அரங்கம் அமைக்கவும், 2 கோடி ரூபாய் செலவில் மாநில செய்தி நிலையம் அமைக்கவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
அதன்படி, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 452 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் மூன்று உயர் தளங்களுடன் கட்டப்படவுள்ளது. இக்கட்டடத்தின் முதல் தளத்தில் சுமார் 600 பேர் அமரக்கூடிய வகையில் கலையரங்கம், மிக முக்கியப் பிரமுகர்கள் அமர முகப்பு அறை, மிக முக்கியப் பிரமுகர்கள் உணவருந்த உணவறை, உணவு மையம் மற்றும் நான்கு மின்படிக்கட்டுகள் அமைக்கப்படும். இரண்டாம் தளத்தில் 600 இருக்கைகள் கொண்ட கலையரங்கம், 115 பேர் அமரக்கூடிய வகையில் கூட்டரங்கு அறை, பொழுதுபோக்கு அறை, அடுக்கு அறைகள், படத்தொகுப்பு அறை, ஒலி சேர்க்கை அறை, தகவல் மையம் உணவு மையம், ஓய்வறை ஆகியவையும், மூன்றாம் தளத்தில் 1000 இருக்கைகள் கொண்ட பல்நோக்கு அரங்கம், 115 பேர் அமரக்கூடிய வகையில் கூட்டரங்கு கூடம் மற்றும் நவீன சமையல் கூடம் ஆகியவை அமைக்கப்படும். தரைத்தளத்தில் முக்கியப் பிரமுகர்கள் அமர முகப்பு அறை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அறை, பராமரிப்பு அறை, ஓய்வுஅறை, வாகனங்கள் நிறுத்த இட வசதி ஆகியவை அமைக்கப்பட்டிருக்கும்.
மேலும், கலையரங்கம் கட்டப்படவுள்ள கட்டட வளாகத்திலேயே 2 கோடி பொய் செலவில் 10,000 சதுர அடி பரப்பளவில் மாநில செய்தி நிலையம் கட்டப்படவுள்ளது.
இத்தகைய நவீன வசதிகளுடன் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கம் மற்றும் மாநில செய்தி நிலையம் ஆகியவற்றிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம், பொதுப் பணித் துறைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர்
ஜெ. குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 17 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 23 hours ago |
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
தொடர் கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்
-
பாட்டியாலாவில் விபத்து: 4 சட்டக்கல்லூரி மாணவர்கள் பலி
18 May 2024பாட்டியாலா : பார்ட்டியில் கலந்து கொண்டு விடுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளானதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1120 கனஅடியாக அதிகரிப்பு
18 May 2024சேலம் : தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1120 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
லக்னோ ஆறுதல் வெற்றி
18 May 2024மும்பை : மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி ஆறுதல் வெற்றிப்பெற்றது.
மும்பை பந்துவீச்சு...
-
கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 43 பேர் பலி
18 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
பார்லி. தேர்தலில் இன்டியா கூட்டணி வெல்லும்: பா.ஜ.க.வின் கனவுகள் ஒருபோதும் பலிக்காது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
18 May 2024சென்னை : மதவெறுப்பு பிரசாரம் கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ள
-
மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
18 May 2024சென்னை : மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் விலை.
-
ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது
18 May 2024புது டெல்லி : ஆம் ஆத்மி பெண் எம்.பி.
-
ஏர் இந்தியா விமானத்தில் திடீர் எந்திர கோளாறு: திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது
18 May 2024திருச்சி : 137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
பாண்ட்யாவுக்கு தொடரும் சோதனை: 2025 ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் விளையாட தடை
18 May 2024மும்பை : அடுத்த சீசனில் மும்பை அணியின் முதல் போட்டியில் விளையாட பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
இந்திய மசாலாக்களுக்கு தடை விதித்த நேபாளம்
18 May 2024காத்மாண்டு : இந்திய மசாலப் பொருட்களின் தரம் குறித்தக் குற்றச்சாட்டுகளால் சிங்கப்பூர், ஹாங்காங்கைத் தொடர்ந்து நேபாளத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல்: 49 தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது
18 May 2024லக்னோ : பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடக்கவிருக்கும் 49 தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
-
இதுவே கடைசி போட்டியாக இருக்கலாம்: டோனியுடனான நட்பு குறித்து மனம் திறந்தார் விராட் கோலி
18 May 2024பெங்களூரு : யாருக்கு தெரியும் நானும் அவரும் விளையாடுவது இதுவே கடைசியாகக்கூட இருக்கலாம் என்று நேற்று சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடும் முன் பெங்களூரு வீ