எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், டிச.31 - இந்திய பெண் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் இந்திய அரசின் பதில் நடவடிக்கையால் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
வேறுவழியின்றி தேவயானி வழக்கில் நடந்த தவறுகள் குறித்து அமெரிக்க அரசு அதிகாரிகள் இப்போது மறுஆய்வு நடத்தி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு கவுன்சில், வெளியுறவுத் துறை, நீதித்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த மறுஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று துறை அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில் தேவயானி வழக்கை கையாண்டதில் பல்வேறு தவறுகள் இழைக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அமெரிக்க அதிகாரிகள் தங்கள் தவறுகளை மறைக்க வழி தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கருதுகிறது. மேலும் இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருவதால் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், அதிநவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதில் அமெரிக்கா அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தேவயானி கோப்ரகடே வழக்கால் இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதை பென்டகன் விரும்பவில்லை. தேவயானியை கைது செய்தது தவறு என்பதை இந்திய அரசு ஆணித்தரமாகவும் ஆதாரப் பூர்வமாகவும் அமெரிக்காவிடம் பலமுறை எடுத்துரைத்துள்ளது. விசா விண்ணப்பத்தில் தேவயானியின் மாத ஊதியமான 4500 அமெரிக்க டாலரை (சுமார் ரூ.2,78,000), அமெரிக்க போலீஸார் பணிப்பெண் சங்கீதாவுக்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதியம் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவுக்கான துணைத் தூதராக தேவயானி இருந்தபோது, ஐ.நா. சபைக்கான இந்திய தூதரக ஆலோசகராகவும் அவர் செயல்பட்டார்.
வியன்னா ஒப்பந்தத்தின்படி ஐ.நா. தூதரை கைது செய்யவோ, அவரது உடைமைகளை பறிமுதல் செய்ய வோ கூடாது. அந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா அப்பட்டமாக மீறியுள்ளது. தூதர் என்றும் பாராமல் பொது இடத்தில் அவரை கைவிலங்கிட்டு கைது செய்தது, ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தியது, போதை அடிமைகளுடன் ஒரே அறையில் அடைத்தது உள்ளிட்ட விவகாரங்களை இந்தியா கண்டனத்துடன் சுட்டிக் காட்டியுள்ளது.அமெரிக்காவின் நடவடிக்கை களுக்குப் பதிலடியாக டெல்லியில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான பல்வேறு சலுகைகளையும் இந்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஜெய்சங்கர் சில நாள்களுக்கு முன்பு அந்த நாட்டின் மூத்த வெளியுறவுத் துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அப்போது, அமெரிக்காவில் இந்தியத் தூதர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அதே மரியாதைதான் இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதர்களுக்கும் அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கூறியதாகத் தெரிகிறது.
ஆரம்பம் முதலே தேவயானி கைது விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை வழக்கத்துக்கு மாறாக மிகக் கடுமையாக இருப்பதால் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியிருப்பதாவது: தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் இந்தியாவின் ஆக்ரோஷ செயல்பாடு களை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இந்த விவகாரத்தில் என்ன நடந்தாலும் அதன் விளைவுகளை நாங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்: கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
06 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி
06 May 2024புதுடெல்லி : இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி இடம்பெற்றுள்ளது.
-
சென்னையில் நாய்கள் கடித்து படுகாயம்: சிறுமியின் மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் : மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
06 May 2024சென்னை : சென்னையில் நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் த
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு : உதவி எண்களும் அறிவிப்பு
06 May 2024சென்னை : 2023-2024-ம் ஆண்டு 12- வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு
-
கடந்த 23 ஆண்டுகளில் பிரதமர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
06 May 2024கொல்கத்தா : '23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார்.
-
'நீட் தேர்வு' வினாத்தாள் கசிவா? - தேசிய தேர்வு முகமை விளக்கம்
06 May 2024சென்னை : ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
-
அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோடையில் மக்கள் கடும் அவதி: தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
06 May 2024சென்னை, அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ராகுலை விமர்சித்து விடியோ வெளியீடு: பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு
06 May 2024பெங்களூரு : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரை விமர்சித்து பாஜக விடியோ வெளியிட்ட விவகாரத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்
-
லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
06 May 2024லக்னோ : ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டத்தில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
06 May 2024டெல்லி : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.வும், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவுக்கு ஜாமீன் மற
-
டாஸில் தோற்றாலும் போட்டியில் வெற்றி : ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்
06 May 2024லக்னோ : டாஸில் தோற்றாலும் ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு : 94 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது
06 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
எம்.எஸ்.டோனி புதிய சாதனை
06 May 2024ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு
06 May 2024டெல்லி : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மர்மமாக உயிரிழந்த காங். தலைவர் ஜெயக்குமாரின் செல்போன் மாயம்: நெல்லை போலீசார் தீவிர விசாரணை
06 May 2024நெல்லை : மர்மமாக உயிரிழந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன
-
சிறந்த வீரர் - வீராங்கனை விருது: ஏப்ரல் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
06 May 2024துபாய் : ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
-
அதிகமுறை ஆட்டநாயகன் விருது: ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை
06 May 2024தர்மசாலா : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
தர்மசாலாவில்...
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024