முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சாரம் செய்தபோது நடிகர் குண்டு கல்யாணம் மீது கல்வீச்சு

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable


திருக்காட்டுப்பள்ளி, ஏப்.17 - தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் இரவு பிரசாரம் செய்த நடிகர் குண்டு கல்யாணம் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். பூதலூரில் அதிமுக வேட்பாளர் பரசு ராமனை  ஆதரித்து திறந்த ஜீப்பில் நடிகர் குண்டு கல்யாணம் பிரச்சாரம் செய்தார். பூதலூர் நான்கு வழி்ச்சாலையில்  வந்தபோது இவர் மீது மர்ம நபர்கள் கல் வீசினர். இதில் ஒரு கல் வாகனத்தின் மீது விழுந்தது. இதனால் அவருடன் இருந்த காமராஜ், திருஞானசம்பந்தம், இளவரசன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.  கல் வீசிய நபர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் அங்கு சென்று சமரசப் பேச்சு நடத்தினர். கற்களை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவையாறு சட்டப் பேரவை உறுப்பினர் ரெத்தினசாமியும் வலியுறுத்தியுள்ளார்.
     
             
  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்