எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூன்15 - பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றபின்பு முதன்முதலாக நேற்றுமுன்தினம் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவை டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி கோரும் மனுவை பிரதமரிடம் ஜெயலலிதா கொடுத்தார். அதை மன்மோகன் சிங் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது என்றார். பின்னர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளித்தார்.
அதன் விபரம் வருமாறு:-
பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமரிடம் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த விபரம் அடங்கிய மனு ஒன்றையும் கொடுத்தேன். முதலில் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க வேண்டும். இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு உடனடியாக கொடுக்க வேண்டும். வரும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கூடுதலாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து நான் முதல்வராகிய சிறிது காலத்திற்குள் தமிழகத்தில் பழுதடைந்திருந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் பழுதுபார்க்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு உடனடியாக 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து உடனடியாக வழங்க வேண்டும். அது குறித்து தீவிர பரிசீலனை செய்வதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார். தமிழக கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்தினரால் பெரும் துயரத்திற்கு ஆளாகி அனாதையாக்கப்பட்டுள்ள தமிழர்களின் தற்போதைய உண்மையான வாழ்வு நிலை எப்படி இருக்கிறது என்பதை கண்டறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தமிழர்கள் பகுதிக்கு சென்றுவர மத்திய அரசு அனுமதி பெற்றுத்தர வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை நீதிமன்றம் மீது மக்களிடத்தில் நம்பிக்கை ஏற்படும்படி உள்ளது. தயாநிதி மாறன் ராஜினாமா செய்யாவிட்டால் அவரை பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வுகண்டு அணையில் கூடுதல் தண்ணீரை பெருக்க வழிவகை செய்து கொடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும். சேதுசமுத்திர திட்டத்தில் அ.தி.மு.க. அரசின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. முதலில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையே பின்பற்றப்படும். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசுடன் சுமூகமான உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறோம். மத்திய அரசுடன் மோதல் போக்கை நாங்கள் விரும்பவில்லை. மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு விரைவாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக தாமதத்தை தவிர்க்கவே ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலகம் மாற்றப்பட்டுள்ளது. செயல்படுகிற அரசு புதிய தலைமை செயலகத்தில் இயங்க முடியாது. தி.மு.க. செய்த சாதனையெல்லாம் நாட்டின் பணத்தை கொள்ளையடித்ததுதான். கடந்த ஆட்சியில் தி.மு.க.வினர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். தான் செய்த தவறுகளுக்கான விலையை தி.மு.க. இப்போது கொடுத்துக்கொண்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இன்னும் தி.மு.க. நீடிப்பதால் தாம் சோனியா காந்தியை சந்திப்பது உசிதமாக இருக்காது என்று நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க.வை நீக்கிவிட்டு அ.தி.மு.க.வின் ஆதரவை கேட்டால் அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்று ஜெயலலிதா சூசகமாக தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. இருக்கிறது. மேலும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் தி.மு.க. இருக்கிறது. இந்தமாதிரியான சூழ்நிலையில் நான் சோனியா காந்தியை சந்திப்பது சரியாக இருக்காது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். என்னுடைய ஆதரவை யாராவது விரும்பினால் அவர்கள் என்னிடம் நேராக கேட்க வேண்டும். அவர்கள் சார்பாக நீங்கள் (நிருபர்கள்) கேட்கக்கூடாது என்றார். காங்கிரஸ் பலவீனமாக இருப்பதால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயங்குகிறீர்களா? என்று ஒரு நிருபர் கேட்டதற்கு ஜெயலலிதா மேற்கண்டவாறு பதில் அளித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றதையொட்டி ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதனால் காங்கிரஸ் -அ.தி.மு.க. இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
அன்னா ஹசாரே போராட்டம் குறித்து கேட்டதற்கு, ஜனநாயகத்தில் ஊழலை எதிர்த்து போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்றார்.
உங்கள் (ஜெயலலிதா) டெல்லி வருகை காரணமாக தி.மு.க. அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது குறித்து நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. தி.மு.க. கவலை அடைந்திருப்பதாக நீங்கள்( நிருபர்கள்) கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். அணிமாற்றம் குறித்து முன்கூட்டியே கருத்து கூற இயலாது என்றும் ஜெயலலிதா கூறினார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்குகள் எதுவும் என்னாலோ அல்லது எனது கட்சியாலோ தொடரப்படவில்லை. அவை அனைத்தையும் செய்தது மத்திய அரசுதான். எனவே இதில் பழிவாங்கும் செயல் என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க.வுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் தொடர நான் எந்த நிர்பந்தமும் செய்யவில்லை. தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசுதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்து மட்டங்களிலும் ஊழல், மோசமான நிர்வாகம், ஆட்சியின் அனைத்து பிரிவுகளிலும் ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கருத்து சுதந்திரம் பறிப்பு போன்ற பல பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஹிட்லர் ஆட்சியில் இருந்ததுபோல், உகாண்டாவின் இடி அமீன் ஆட்சியில் இருந்தது போல் மக்கள் உணர்ந்தனர் என்றும் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்3 days 1 min ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 9 min ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 2 days ago |
-
தமிழகத்தில் மேலும் புதிய 6 மருத்துவக் கல்லூரிகள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி
24 May 2024புது டெல்லி, தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
தென்கொரியா, சீனா, ஜப்பான் பங்கேற்கும் உச்சி மாநாடு: 5 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடக்கிறது
24 May 2024சியோல், தென் கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உச்சி மாநாடு 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாளை 26-ம் தேதி நடக்கிறது.
-
பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
24 May 2024போர்ட் மோர்ஸ்பை, தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியா
-
முல்லைப்பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
24 May 2024சென்னை:சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக்
-
தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும்: டெல்லியில் அண்ணாமலை பேட்டி
24 May 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப் பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் என்று தமிழக பா.ஜ.க.
-
பொறியியல் கல்லூரி கலந்தாய்வு: மொத்த இடங்களின் பட்டியல் ஜூலை 2-வது வாரத்தில் வெளியீடு
24 May 2024சென்னை, பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு மொத்த இடங்களின் பட்டியல் ஜூலை 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
-
நாம் தமிழரை விட பா.ஜ., அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்து விடுகிறேன்: ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்
24 May 2024சென்னை, ‘பா.ஜ.க. தனித்து பெற்ற வாக்குகள் நாம் தமிழரை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்து விடுகிறேன்’ என, பா.ஜ.க.
-
முல்லை பெரியாறில் புதிய அணை: தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
24 May 2024சென்னை, சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்பிற்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக இடிக்க, மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து
-
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது
24 May 2024ஊட்டி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
-
இந்திய முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்புக்கு இஸ்ரேலே காரணம்: பிரதமர் மோடிக்கு பாலஸ்தீன அரசு கடிதம்
24 May 2024காசா, இந்திய முன்னாள் ராணுவ வீரரின் இறப்புக்கு இஸ்ரேலின் தாக்குதல் தான் காரணம் என்று பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட
-
6-ம் கட்ட தேர்தல்:58 பார்லி. தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
24 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நேற்று முன்தினம் பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று
-
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
24 May 2024சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
ஏ.ஐ தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் யாருக்கும் வேலை கிடைக்காது: எலான்மஸ்க் கணிப்பு
24 May 2024வாஷிங்டன், ஏ.ஐ தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் யாருக்கும் வேலை கிடைக்காது என்று ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் மீதான வழக்கு: ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு
24 May 2024சென்னை, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்
-
கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை
24 May 2024சென்னை:நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
தமிழகத்தில் மே 30 வரை மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
24 May 2024சென்னை, தமிழகத்தில் இன்று (மே 25) முதல் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் ஜூன் 30-ம் தேதி வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து
24 May 2024ஐதராபாத், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வி.ஐ.பி.
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் முதல் குழு இன்று அமெரிக்கா பயணம்
24 May 2024புதுடெல்லி: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
வங்கக்கடலில் இன்று புயல் உருவாகிறது: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
24 May 2024சென்னை, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
தானே ரசாயன ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக உயர்வு
24 May 2024தானே, மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் நடந்த ரசாயன தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் வெடித்து சிதறி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண
-
வங்கதேச எம்.பி. கொலை வழக்கு: பெண் ஒருவரிடம் விசாரணை
24 May 2024டாக்கா, வங்கதேச எம்பி அன்வருல் அஸீம் அனார் கொலை வழக்கில், அந்நாட்டு பெண் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
-
கோவையில் சோகம்: பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் பரிதாப பலி
24 May 2024கோவை, கோவையில் குடியிருப்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கேரள அரசு தடுப்பணை கட்ட எதிர்ப்பு: திருப்பூர் விவசாயிகள் நாளை முற்றுகை போராட்ட அறிவிப்பு
24 May 2024திருப்பூர், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 26-ம் தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவத
-
கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 430 கோடி ரூபாயில் நிவாரண திட்டம்: தமிழ்நாடு அரசு அறிக்கை
24 May 2024சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.430 கோடியில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
பண்ணை வீட்டிற்குள் நுழைய முயன்றதாக புகார்: சென்னையில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் கைது
24 May 2024சென்னை, காவலாளியை தாக்கி பண்ணை வீட்டிற்குள் நுழைய முயன்றதாக வந்த புகாரையடுத்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.