எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.அக்.2 - சத்தியமூர்த்தி பவனில் காமராஜர்-சத்தியமூர்த்தி ஆகியோரின் சிலைகள் திறக்கப்பட்டது. இதில் கேரளா முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலையும், விடுதலை வீரர் சத்தியமூர்த்தியின் மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
காமராஜர், சத்தியமூர்த்தி சிலைகள் திறப்பு விழா மற்றும் ராஜீவ்காந்தி அரங்கம் திறப்பு விழா நேற்று முன்தினம்மாலை கட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், வி.நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன் மற்றும் விஜயதாரணி எம்.எல்.ஏ., முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கேரள மாநில முதல்வர்உம்மன்சாண்டி, பெருந்தலைவர் காமராஜர் சிலையை திறந்துவைத்தார். பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சத்தியமூர்த்தி சிலையை திறந்துவைத்தார். ராஜீவ்காந்தி பெயர் பலகையை குமரி அனந்தன் திறந்து வைத்தார்.
விழாவில், கேரளா மாநில முதல்வர் உம்மன்சாண்டி பேசியதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் அரசியல் வானில் ‘கிங் மேக்கர்’ ஆக விளங்கினார். உண்மையான, சிறந்த தலைவர். அனைத்து தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்குபவர். கேரளா-தமிழகத்துக்கு இடையே நல்ல உறவை வளர்த்தவர். பொதுவாழ்வில் எளிய வாழ்வை வாழ்ந்தவர். அந்தவகையில் அவர் சிலையை திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இலவச கல்வி, மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர்.இன்று அரசியலுக்கு வருபவர்கள் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்திருக்கிறது. இதற்கு எந்த தனிநபரையும் குற்றம் சாட்டக்கூடாது. கட்சியை பலப்படுத்த நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் தோல்வியில் இருந்து மீண்டு எழும்.
மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அண்டை மாநிலங்களும் அமல்படுத்தும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசியதாவது:-
இன்றைக்கு குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள், ஆனால் வளர்ச்சிக்கான மாதிரியை காமராஜர் அன்றைக்கே தமிழகத்தில் உருவாக்கி காட்டியவர். மத்திய காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஏராளமான பள்ளிகளை உருவாக்கி இருக்கிறோம். உணவு பாதுகாப்பு சட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்திருக்கிறோம்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை எதிர்த்த பா.ஜ.க., தற்போது எங்கள் திட்டங்களைதான் செயல்படுத்துகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. ஆனால் இதை அவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். மங்கள்யான் உள்பட அனைத்து திட்டங்களின் வெற்றிக்கும் காங்கிரஸ்தான் காரணம். இதை யாரும் பங்குபோட முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை காட்டிலும் காங்கிரஸ் கட்சி கட்டுகோப்புடன் விளங்குகிறது. இங்கே கூடியிருக்கும் கூட்டம் இன்றைய அரசியல் சூழலுக்கேற்ப எதையும் செய்யும் கூட்டம். பெருந்தலைவருக்காக கூடிய கூட்டம். காங்கிரஸ் கட்சியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதற்காக இந்த நாளில் நாம் உறுதியேற்க வேண்டும். வெறும் உதட்டளவில் மட்டும் ஒற்றுமையை காட்டாமல், முழு உணர்வுடன் நாம் உறுதி ஏற்க வேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு நாம் உழைக்க வேண்டும். மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் காமராஜரின் ஆட்சியை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் பேசும்போது, ‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று கொண்டதில் இருந்து நான் ஒரு நீதிபதியை போல் செயல்பட்டு கொண்டு இருக்கிறேன். நாளை விடிவது நமக்கே என்று எண்ணி ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் உழைத்தால், காமராஜர் ஆட்சியை நம்மால் அமைக்க முடியும்’ என்றார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் கோவை தங்கம் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி
29 Apr 2024மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.