எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.29 - மக்களின் சுமையை போக்கும் வகையில் சமையல் எரிவாயு விலையில் ரூ.14.73 குறைகிறது, வாட் வரியை நீக்கி முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச சந்தை விலைக்கு ஏற்றாற்போல் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதன் விளைவாக, பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வரும் நிலையில், 24.6.2011 நள்ளிரவு முதல் டீசலுக்கான விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவிற்கான விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாயும், மண்ணெண்ணெய்க்கான விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தி மைய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இதிலும் குறிப்பாக சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டதன் விளைவாக தாய்மார்கள் விரக்தியில் உறைந்து போயுள்ளனர். மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த சமையல் எரிவாயுவை, கரி, விறகு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை காரணமாக, கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ள சூழ்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் என்ற அளவிற்கு விலையை மைய அரசு உயர்த்தி அறிவித்திருப்பது மக்களால் தாங்க இயலாதது ஆகும். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டு, மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியினைக் குறைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்குவது வேடிக்கையானது ஆகும். நம் நாட்டு தேவைக்கான பெட்ரோலியப் பொருட்கள் அனைத்துமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் மூலம் மட்டும் தயாரிக்கப்படுவது அல்ல. உள்நாட்டில் பெறப்படும் கச்சா எண்ணெயின் மூலமும் பெட்ரோலியப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் லாப நோக்கு, நிர்வாகத் திறமை, நிர்வாகச் செலவுகள் ஆகியவையும் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலையை மட்டும் சுட்டிக்காட்டி மைய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிப்பது என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாகும். இவ்வாறு, பல்வேறு வழிமுறைகளையும் ஆராய்ந்து, டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயராதவாறு பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்காமல், மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்று மைய அரசு அறிவுரை கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எனவே தான், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்வினை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், இந்த விலை உயர்வினை மைய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். 2006 முதல் 2011 வரையிலான முந்தைய தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்துவிட்டது. இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு மின்சார வாரியம், மாநில போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் நிறுவனம் உட்பட பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒப்பந்ததாரர்கள், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கிய விவசாயிகள் ஆகியோருக்கு எல்லாம் பல மாதங்களாக நிலுவைத் தொகையை வழங்காமல் விட்டுச் சென்றுள்ளது முந்தைய தி.மு.க. அரசு. இதுவன்றி, கடந்த தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டினால், ஒவ்வொரு துறையும் மிக அதிக அளவிலான தொடர் இழப்பை கடந்த 5 ஆண்டுகளில் சந்தித்து வந்துள்ள சூழ்நிலையில், மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் இல்லாத சூழ்நிலையில், தற்போது சமையல் எரிவாயுவின் விலை மிக அதிகபட்சமாக 50 ரூபாய் அளவுக்கு ஏற்றப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து அவர்களைப் பாதுகாக்க தமிழக அரசால் வழங்கக்கூடிய நிவாரணம் அனைத்தையும் வழங்க நான் முடிவு செய்துள்ளேன். அதன் அடிப்படையில், மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டு, இனிமேல் குறைப்பதற்கு ஏதுமில்லை என்ற அளவில் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நான் முடிவு எடுத்துள்ளேன்.
அதன்படி, சமையல் எரிவாயு மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 4 விழுக்காடு மதிப்புக் கூட்டு வரியை 1.7.2011 முதல் அறவே நீnullக்கிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனையடுத்து, தமிழ்நாட்டில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு சிலிண்டர் எரிவாயுவின் விலை 404 ரூபாய் 40 பைசா என்ற அளவிலிருந்து 389 ரூபாய் 67 பைசா என்ற அளவிற்கு, அதாவது ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவின் விலை 14 ரூபாய் 73 பைசா அளவிற்கு குறையும் என்பதையும், இனி வருங்காலங்களிலும் சமையல் எரிவாயுவின் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில் மத்திய அரசால் உயர்த்தப்பட்ட 50 ரூபாய் விலை உயர்விற்கு தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரியின்படி மாநில அரசிற்கு ஆண்டொன்றுக்கு 16 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், ஏற்கெனவே சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி மூலம் ஆண்டொன்றுக்கு கிடைத்து வந்த 104 கோடி ரூபாய் வருவாயையும் சேர்த்து, மொத்தம் 120 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்: கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
06 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
06 May 2024அணிகள் போட்டிகள -
இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி
06 May 2024புதுடெல்லி : இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி இடம்பெற்றுள்ளது.
-
சென்னையில் நாய்கள் கடித்து படுகாயம்: சிறுமியின் மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் : மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
06 May 2024சென்னை : சென்னையில் நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் த
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு : உதவி எண்களும் அறிவிப்பு
06 May 2024சென்னை : 2023-2024-ம் ஆண்டு 12- வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு
-
கடந்த 23 ஆண்டுகளில் பிரதமர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
06 May 2024கொல்கத்தா : '23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார்.
-
'நீட் தேர்வு' வினாத்தாள் கசிவா? - தேசிய தேர்வு முகமை விளக்கம்
06 May 2024சென்னை : ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
-
அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோடையில் மக்கள் கடும் அவதி: தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
06 May 2024சென்னை, அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ராகுலை விமர்சித்து விடியோ வெளியீடு: பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு
06 May 2024பெங்களூரு : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரை விமர்சித்து பாஜக விடியோ வெளியிட்ட விவகாரத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்
-
லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
06 May 2024லக்னோ : ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டத்தில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
06 May 2024டெல்லி : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.வும், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவுக்கு ஜாமீன் மற
-
அனைத்து மாவட்டங்களும் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி
06 May 2024சென்னை : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் 90 சதவிதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
-
டாஸில் தோற்றாலும் போட்டியில் வெற்றி : ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்
06 May 2024லக்னோ : டாஸில் தோற்றாலும் ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு : 94 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது
06 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
எம்.எஸ்.டோனி புதிய சாதனை
06 May 2024ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு
06 May 2024டெல்லி : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மர்மமாக உயிரிழந்த காங். தலைவர் ஜெயக்குமாரின் செல்போன் மாயம்: நெல்லை போலீசார் தீவிர விசாரணை
06 May 2024நெல்லை : மர்மமாக உயிரிழந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன