எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.அப்போது மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு குறை பிரசவம், மூச்சுதிணறல் , குறைவான எடையுடன் பிறந்ததல் போன்றவை காரணம் என்று விளக்கமளித்தனர்.
விழுப்புரம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்விஜயபாஸ்கர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவுரைப்படி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர். ஜெ. இராதாகிருஷ்ணன், ஆகியோர் நேற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தனர். மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படும் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவையில் மிகச் சிறப்பாகச் செயல்படும் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தரமான மருத்துவ சேவை வழங்குவதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து பாடுபட்டுவருகிறது. தமிழகத்தில் சுகாதாரம் மற்றும் தாடீநு சேடீநு நலனில் அரசு மருத்துவ நிலையங்களின் பங்கு மிகவும் சிறப்பாக இருப்பதன் காரணமாகத் தான், நாளொன்றுக்கு 1,800க்கும் மேற்பட்ட பிரசவங்கள் அரசு மருத்துவ நிலையங்களில் நடைபெறுகின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 6.8 லட்சம் குழந்தைகள் அரசு மருத்துவ நிலையங்களில் பிறக்கின்றன. தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைந்த 43 மருத்துவமனைகள், ஒரு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 30 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 240 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,751 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 134 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்படும் காரணத்தினால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடாமல் அரசு மருத்துவ நிலையங்களில் பிரசவங்கள் பார்ப்பதினால்தான் இந்தியாவிலேயே மிக அதிக விழுக்காடான பிரசவங்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில் நடைபெறுகின்றன.
ஏனெனில், பிறக்கின்ற அனைத்து குழந்தைகளையும் மிகச் சிறப்பாக பராமரிக்கக்கூடிய அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் உள்ளதால் மட்டுமே தான் தாடீநுமார்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடுகிறார்கள். அதுமட்டுமின்றி தனியார் 2 மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்து அவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள பச்சிளம் குழந்தைகளையும் அரசு தாங்கி பிடித்து காப்பாற்றுகிறது. விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றும் இன்றும் சில பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. இந்த இறப்பு அனைத்தும் குறை பிரசவம், குறைவான எடையுடன் பிறந்த குழந்தை மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு இயற்கையான காரணங்களால் தான் நிகழ்ந்துள்ளது. இதில் சிகிச்சை குறைபாடு எதுவும் இல்லை. மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர்களான டாக்டர் சினுவாசன் மற்றும் டாக்டர் குமுதா ஆகியோர் அடங்கிய ஒரு மருத்துவக் குழு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு முகாமிட்டு அம்மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர். பதிவர்தினி அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தபோது, இம்மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பிரிவில் இன்குபேட்டர், வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தைக்கு ஏற்படும் மூச்சுத் திணறல், முக்கிய உறுப்புகள் முதிர்ச்சியடையாத நிலையில் பிறக்கும் எடை குறைந்த குழந்தைகள், கருப்பையில் வளர்ச்சி குன்றிய குழந்தை போன்ற காரணங்களால் தான் சில குழந்தைகளுக்கு இறப்பு ஏற்படுகிறது என்றும், சிகிச்சையில் எந்த குறைபாடும் இல்லை என்றும், இறந்த குழந்தைகளுக்குகூட வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது என்றும், சிகிச்சை பலனின்றி சில குழந்தைகள் இறந்துவிட்டனர் என்றும், மருத்துவர்கள் மாண்புமிகு அமைச்சரிடம் ஆய்வின்போது தெரிவித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மருத்துவர்களை அறிவுறுத்தினர்கள். பின்னர் மருத்துமனையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா, நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் போதுமான அளவில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 103 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிக்கலான பிரசவங்களை கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உரிய நேரத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பிட மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டு முயற்சியுடன் கர்ப்பகால பராமரிப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்கள். கர்ப்ப காலத்தில் எடை குறைவான தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு உரிய சிகிச்கை அளிக்கப்பட வேண்டும் என்று இம்மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள், அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2014-15-ஆம் ஆண்டு சுமார் 54,539 பிரசவங்கள் நிகந்துள்ளன. இதில் அரசு மருத்துவ நிலையங்களில் மட்டும் சுமார் 47,572 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. மாவட்டத்திலுள்ள 103 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் உயர் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பச்சிளம் குழந்தைகளை தாயுள்ளத்தோடு பராமரித்து பாதுகாக்கும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலோடு செயல்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தாயின் பரிவோடு சேவையை தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் , மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது மருத்துவத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 14 hours ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்18 hours 11 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 14 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 17 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-05-2024.
18 May 2024 -
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தாய்லாந்து, சவுதிக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை
18 May 2024சென்னை : தாய்லாந்து, சவுதி அரேபியா, மேற்கு வங்கத்திற்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&nbs
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்
18 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
18 May 2024நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
தொடர் கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு
18 May 2024லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது.
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 43 பேர் பலி
18 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.