எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: வரிசையில் நிற்காமல் புறநகர் மின்சார ரெயில் டிக்கெட்டை செல்போனில் பெறும் வசதி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் டிக்கெட்டை டி.கே.ரங்கராஜன் எம்.பி. பதிவு செய்தார்.பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் வசதியாக காகிதமில்லா முன்பதிவில்லாத மின்சார ரெயில் டிக்கெட்டை செல்போனில் பதிவு செய்து பயணம் செய்வதற்கு தெற்கு ரெயில்வே செல்போன் அப்ளிகேஷனை நேற்றுமுன்தினம் அறிமுகம் செய்தது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் டெல்லியில் செய்யப்பட்டு இருந்தது. இந்த சேவையை மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ‘வீடியோ கான்பரன்சிங்’கில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் தொடங்கி வைத்தார். சென்னையில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் அசோக் கே.அகர்வால், டி.கே.ரங்கராஜன், தலைமை வணிக மேலாளர் சரளா பாலகோபால் ஆகியோர் இருந்தனர்.
மத்திய அமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, சென்னையில் அதன் முதல் டிக்கெட்டை டி.கே.ரங்கராஜன் எம்.பி. பதிவு செய்தார். அதையடுத்து, தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் பதிவு செய்தார். அதன்பின்னர், இதுகுறித்து டி.கே.ரங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பயணிகளுக்கு உதவி செய்கிற போது, வேலைவாய்ப்பை அது எந்தவிதத்திலும் குறைத்துவிடக்கூடாது என்பதை ரெயில்வே நிர்வாகம் மனதில் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எந்த நேரத்திலும் இதை வலியுறுத்துவது எனது கடமை.
அதே போல், மத்திய அமைச்சர் இந்த சேவையை தொடங்கி வைத்திருப்பது பொருத்தமானது. தனிப்பட்ட முறையில் அவருக்கும், எனக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது என்று அவரே(மத்திய மந்திரி சுரேஷ் பிரபு) கூறி இருக்கிறார். அது உண்மை தான். அது எப்போதுமே தொடரும். ஆனால் ரெயில்வேயை மேம்படுத்துவதற்கு பயணிகளின் நலனை மனதில் வைத்து செயலாற்றுவதற்கு நாங்கள் இணைந்து நிற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் அசோக் கே.அகர்வால் கூறும்போது, ‘தற்போது இந்த திட்டம் முதற்கட்டமாக சென்னை எழும்பூர்-தாம்பரம் இடையே சோதனை அடிப்படையில் செயல்படுத்தியுள்ளோம். விரைவில் அதை விரிவுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். கோடைக் கால சிறப்பு ரெயில் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இனிவரக்கூடிய காலங்களில் அறிவிக்கப்படும்’ என்றார்.
புறநகர் மின்சார ரெயில் டிக்கெட்டை செல்போனில் பெறும் வசதியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்ற விவரம் வருமாறு:-
‘ஆண்டிராய்டு’ செல்போனில் இணையதள வசதி இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கூகுள் ‘பிளே ஸ்டோரில்’ ‘யு.டி.எஸ். மொபைல் டிக்கெட்டிங்’ என்ற அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின்னர், ‘ரெயில்வே இ வாலெட்’டில் கணக்கு தொடங்க வேண்டும். இந்த கணக்கை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது டிக்கெட் கவுண்ட்டர்களில் டா அப் செய்யலாம். இதற்கு டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டை பயன்படுத்தலாம். அப்போது தான் செல்போனில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளும் போது, பணத்தை இந்த கணக்கு மூலம் செலுத்த இயலும்.
இதையடுத்து, ‘யு.டி.எஸ். மொபைல் டிக்கெட்டிங்’ அப்ளிகேஷனை ‘கிளிக்’ செய்தால், புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் கேட்கும். அதில் இடங்களை பதிவு செய்துவிட்டு, அதன்பின்னர், எத்தனை டிக்கெட் வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்.
தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்தவுடன், டிக்கெட் சரியாக பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று குறிப்பிடும். அதன்பின்னர் ‘ஓகே’ என்ற பட்டனை அழுத்தினால், டிக்கெட் முழுமையாக பதிவு செய்யப்பட்ட அந்த திரை வரும்.
இந்த டிக்கெட்டின் கால நேரம் பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 1 மணி நேரம் வரை செல்லுபடி ஆகும். டிக்கெட்டை மற்றவர்களுக்கு அனுப்ப இயலாது. ஒரு முறை பதிவு செய்த பின்பு மாற்றம் செய்ய இயலாது. பதிவு செய்த பிறகும் இணையதள சேவை இருக்க வேண்டும்.
அப்போது தான் டிக்கெட் பரிசோதகர் வரும்போது டிக்கெட்டை எடுத்து காட்ட முடியும். அப்ளிகேஷன் உள்ளே சென்று ‘ஷோ ஆப்ஷன்’ என்ற பட்டனை அழுத்தினால் பதிவு செய்த டிக்கெட்டை எடுத்து விடலாம். சீசன் டிக்கெட்டை புதுப்பிக்கும் வசதியும் இதில் உண்டு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 20 hours ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 17 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 23 hours ago |
-
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்
18 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
தாய்லாந்து, சவுதிக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை
18 May 2024சென்னை : தாய்லாந்து, சவுதி அரேபியா, மேற்கு வங்கத்திற்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&nbs
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
18 May 2024நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
குற்றாலம் அருவிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
18 May 2024நெல்லை : குற்றாலத்தில் மேலும் அசம்பாவிதங்கள் வராமல் தடுக்க அருவி பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
தொடர் கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு
18 May 2024லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1120 கனஅடியாக அதிகரிப்பு
18 May 2024சேலம் : தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1120 கனஅடியாக அதிகரித்துள்ளது.