எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை 17 - திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஆ.ராசா மற்றும் அவரது செயலாளர் சித்தார்த்த பெகூரா ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு டெல்லி பாட்டியாலா கோர்ட் அனுமதியளித்துள்ளது. ரூ. 1.76 லட்சம் கோடி இமாலய ஊழல் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது தனிச் செயலாளர் சித்தார்த்த பெகூரா, ஸ்வான் கம்பெனி நிறுவனர் ஷாகித் உஸ்மான் பால்வா மற்றும் பலர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாக கூறப்படுவதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழியும், கலைஞர் டி.வி. நிர்வாக அதிகாரி சரத்குமாரும் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உள்ளது. மொத்தத்தில் கருணாநிதி குடும்பத்திற்கு கலைஞர் டி.வி.யில் 80 சதவீத பங்குகள் உள்ளது. 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பாக தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் ராசா, சித்தார்த்த பெகூரா, பால்வா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதே வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதனையொட்டி அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் போதுமான ஆதாரம் இருந்ததால் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்து மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் சில சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், ஆதாரங்களை பதிவு செய்வது தொடர்பாக மீண்டும் ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தவேண்டிய சூழ்நிலை சி.பி.ஐ.க்கு ஏற்பட்டது. அதனால் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நடைபெற்றுவரும் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசாவிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பாகவும், எதிர்தரப்பு சார்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், பிரபல பெண் தரகர் நீரா ராடியாவும், ஆ.ராசாவும் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தியது, 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சில ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவைகளை மூன்றாவது குற்றப்பத்திரிகையில் சேர்க்க வேண்டியுள்ளது. அதனால் ஆ.ராசாவை மீண்டும் நீதிமன்ற காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதற்கு எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டபின்பு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசா, சித்தார்த்த பெகூரா மற்றும்பலரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு நீதிபதி ஜெயின் அனுமதி அளித்தார். மேலும் 3 குற்றப்பத்திரிகையில் ஆவணங்கள், சான்றுகள், வாக்குமூலம், நீராராடியாவுடன் நடத்திய உரையாடல்கள் ஆகியவற்றையும் பதிவு செய்ய நீதிபதி அனுமதி அளித்தார்.
இதனையொட்டி ராசா மற்றும் பலரிடம் நீதிமன்றக் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. இதன்மூலம் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிய தகவல்கள் வெளியாகலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 day 6 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்5 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 1 day ago |
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
22 May 2024சென்னை : வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று
-
குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார் இர்பான்
22 May 2024சென்னை, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்.
-
கடையில் போலீஸ் சோதனை: யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ்
22 May 2024சென்னை, பிரதமர் அலுவலகத்தில் வந்த புகாரின் அடிப்படையில் பிரபல யூட்யூபர் டிடி எஃப் வாசன் இருச்சக்கர உதிரிப்பாகங்கள் கடைக்கு அம்பத்தூர் போக்குவரத்து காவல் துறையினர் நோட்ட
-
குஜராத்தில் 10 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: காங்கிரஸ் கட்சி நம்பிக்கை
22 May 2024காந்திநகர், இந்தியாவில் அரசியல் மாற்றத்துக்கான அலை வீசுவதாகவும், இதனால் குஜராத் மாநிலத்தில் மட்டும் 10 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்றும், அக்கட்சியின் குஜராத் மாநி
-
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை கூடாது : சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
22 May 2024சென்னை : வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
அரியானா பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார் பிரதமர் : கறுப்புக்கொடி காட்ட விவசாயிகள் திட்டம்
22 May 2024சண்டிகர் : அரியானாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கருப்பு கொடி காட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் 'தாயுமானவர் திட்டம்' அடுத்த மாதம் துவக்கம்
22 May 2024சென்னை : தமிழகத்தில் 5 லட்சம் ஏழை குடும்பங்களை மேம்படுத்தும் 'தாயுமானவர் திட்டம்' தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது.
-
சர்ச்சை கருத்துகள்: பிரசாரத்தில் கூடுதல் கவனமுடன் பேச நட்சத்திர பேச்சாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குங்கள் : பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
22 May 2024புதுடெல்லி : பிரசாரத்தின் போது சர்ச்சை கருத்து தெரிவிப்பதாக வந்த புகார்களை அடுத்து கவனத்துடன் பேசுமாறு நட்சத்திர பேச்சாளர்களை அறிவுறுத்த வேண்டும் என்று பா.ஜ., தலைவர் நட
-
பறவைக் காய்ச்சல் எதிரொலி: ராஞ்சியில் ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் அழிப்பு
22 May 2024ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டன.
-
கோலி உயிருக்கு ஆபத்து?
22 May 2024ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் (மே.21) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைட
-
கனமழை எதிரொலி: சுற்றுலா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்
22 May 2024தென்காசி : குற்றாலம், கொல்லிமலை உள்ளிட்ட அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு
-
ஐதராபாத்தை எளிதில் வீழ்த்தி ஐ.பி.எல். இறுதி போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா
22 May 2024அகமதாபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிபயர் போட்டியில், கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதல் அணியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-05-2024.
23 May 2024 -
பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்: குண்டு எறிதல் போட்டியில் சச்சின் கிலாரிக்கு தங்கம்
22 May 2024கோபி : பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் கிலாரி தங்கம் பதக்கம் வென்றார்.
-
முதல் டி- 20 போட்டி: வங்கதேசத்தை வீழ்த்திய அமெரிக்கா
22 May 2024ஹூஸ்டன் : வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
-
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் காம்பீர்? - தேர்வு செய்வதில் தடுமாறும் பி.சி.சி.ஐ.
22 May 2024மும்பை : இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது சவாலானதாக மாறியுள்ளது.
மே 27-ல் முடிவு...
-
தைவானை சுற்றி சீனா திடீர் போர்ப் பயிற்சி
23 May 2024பெய்ஜிங், தைவானை சுற்றி சீனா நேற்று காலை திடீரென 2 நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தொடர் மழை: ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து
23 May 2024ஊட்டி, தொடர்மழை காரணமாக தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை நேற்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
-
இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல்: ரிஷி சுனக் அறிவிப்பு
23 May 2024லண்டன், இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
-
பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து பயன்படுத்தும் புதுவை முதல்வர்
23 May 2024புதுச்சேரி, தனது பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து புதுவை முதல்வர் பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
-
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
23 May 2024பெங்களூரு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
மெக்சிகோவில் பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு
23 May 2024மெக்சிகோ, மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
கன்னியாகுமரி கடற்கரையில் பகவதியம்மனுக்கு ஆறாட்டு
23 May 2024குமரி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை திரிவேணி சங்கம கடற்பகுதியில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது.
-
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: ரோடுஷோவில் பிரியங்கா குற்றச்சாட்டு
23 May 2024சண்டிகர், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன: பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்
23 May 2024சென்னை, கனமழை காரணமாக தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.