எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ரோஜா இல்லம் விருந்தினர் மாளிகையில் விவசாய வறட்சி பாதிப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் சு.கணேஷ், , மத்திய, மாநில வறட்சிக்குழு, தமிழ்நாடு வேளாண் இயக்குநர் தெட்சிணாமூர்த்தி, மத்திய ஊரக சார்புச்செயலாளர் எஸ்.பி.திவாரி, காவேரி மற்றும் தென்னக நீர்ப்பாசன இயக்குநர் (கண்காணிப்பு) ஆர்.அழகேசன் ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேற்று (25.01.2017) கலந்தாய்வு மேற்கொண்டார். இந்த கலந்தாய்வில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ மழை கிடைக்கப்பெறும். ஆனால் நடப்பாண்டில் 168.3 மி.மீ மழையே கிடைக்கப்பெற்றது. இதனால் மாநிலம் முழுவதும் வறட்சி சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கும் வகையில் வறட்சி பாதித்த இடங்களை நேரடி ஆய்வு செய்து பயிர் நிலவரங்கள் மற்றும் வறட்சி நிலை குறித்து தமிழகஅரசிற்கு அறிக்கை அளித்திட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளை மேற்பார்வையிட்டு அறிக்கை அளிக்கும் வகையில் அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் கொண்ட குழுக்களை தமிழகஅரசு அமைத்துள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வறட்சியால் பயிர் கருகிய வயல்வெளிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.65 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இதில் வறட்சியால் பயிர் கருகிய வயல்வெளிகள் 1.05 இலட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இன்று வருகை தந்துள்ள மத்திய வறட்சிக்குழுவினர் அறந்தாங்கி வட்டாரம், பள்ளத்திவயல், கொண்ணமடை டேங்க், பெருங்காடு, ஏகணிவயல், ஏகப்பெருமா@ர் ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சியினால் ஏற்பட்ட சேதம் குறித்த முழுவிபரத்தினையும் ஒரு வாரத்திற்குள் அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பிப்பார்கள். இதன் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் இ.ஏ.இரத்தினசபாபதி (அறந்தாங்கி), பி.ஆறுமுகம் (கந்தர்வக்கோட்டை), மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, இணை இயக்குநர் (வேளாண்மை) அண்ணாமலை, கூட்டுறவு சங்க தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்23 hours 59 min ago |
முட்டைகோஸ் கட்லெட்5 days 5 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2024.
06 Jun 2024 -
ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற வாருங்கள்: அ.இ.அ.தி.மு.க.வினருக்கு வி.கே. சசிகலா அழைப்பு
05 Jun 2024சென்னை, அ.தி.மு.க.வின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற வாருங்கள் என்று வி.கே. சசிகலா அழைப்பு விடுத்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலில் யார், யாருக்கு எத்தனை இடங்கள்? - வாக்கு சதவிகிதம் விவரங்கள் வெளியீடு
05 Jun 2024புதுடெல்லி : மக்களவைத் தேர்தல் என்.டி.ஏ. மற்றும் இன்டியா கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்? வாக்கு சதவிகிதம் எவ்வளவு ?
-
பா.ஜ.க.விற்கு மக்கள் எச்சரிக்கை: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
05 Jun 2024வேலூர் : முதல்வர் மு.க.ஸ்டாலினின் திறமையால் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், தேர்தல் மூலம் பா.ஜ.க.விற்கு மக்கள் எச்சரிக்கை வ
-
சி.எஸ்.கே. அணியில் அஸ்வின்?
05 Jun 2024சென்னை : ஐபிஎல் தொடரில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆடும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்தியா சிமெண்ட்ஸில் இணைந்தார்.
-
நம்பர் 1 இடத்தை இழந்த ஜோகோவிச்
05 Jun 2024'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
-
37 பார்லி. தொகுதிகளில் வெற்றி: 3-வது பெரிய கட்சியானது சமாஜ்வாதி
05 Jun 2024புதுடெல்லி : 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் 3வது பெரிய கட்சியாக சமாஜ்வாதி கட்சி உருவெடுத்துள்ளது.
-
பூங்காவில் வீரர்கள் பயிற்சி வேடிக்கையாக இருக்கிறது : ஐ.சி.சி. மீது ராகுல் டிராவிட் அதிருப்தி
05 Jun 2024நியூயார்க் : இந்திய வீரர்கள் தங்களது முதல் டி-20 போட்டிக்கு முன்னதாக பூங்காவில் பயிற்சி எடுத்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது என்று ஐ.சி.சி.
-
வெற்றியுடன் திரும்புங்கள்: இந்திய அணிக்கு ஜெய் ஷா வாழ்த்து
05 Jun 2024மும்பை : நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியுடன் விளையாடியது.
-
பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோற்றதற்கு இதுதான் காரணம்: அகிலேஷ் யாதவ் விளக்கம்
06 Jun 2024லக்னோ, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோற்றதற்கான காரணம் குறித்து அகிலேஷ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
-
இனி அரச கடமைகளுக்கு இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் திரும்பாமல் போகலாம்: செய்தி நிறுவனம் தகவல்
06 Jun 2024லண்டன், இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்பாமல் போகலாம் என டெய்லி பீஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு
06 Jun 2024ஐதராபாத், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
-
செங்கடல் பகுதியில் 3 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
06 Jun 2024ஏமன், செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற
-
எம்.பி.யாக, அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் பணியாற்றுவேன்: நடிகர் சுரேஷ் கோபி பேட்டி
06 Jun 2024திருவனந்தபுரம், அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் எம்.பி.யாக பணியாற்றுவேன் என்று கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க.
-
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலி 39 பேர் உயிரிழப்பு
06 Jun 2024ஜெருசலேம், காசா பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 53 லட்சம் பேர்
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வாக வாய்ப்பு
06 Jun 2024புது டெல்லி, பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
-
சீனா விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன்
06 Jun 2024புது டெல்லி, சீனா விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு
06 Jun 2024சென்னை, பி.இ., பி.டெக்.
-
மீண்டும் பிரதமராகும் மோடி: அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து
06 Jun 2024புது டெல்லி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அதிபர் ஜோபைடன், அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும்: புடின் எச்சரிக்கை
06 Jun 2024செயின்ட் பீட்டர்ஸ்பர்க், எங்களுடைய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரியவந்தால் மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின
-
பா.ஜ.க. தலைமை திடீர் அழைப்பு: டெல்லி சென்றார் புதுவை அமைச்சர் நமசிவாயம்
06 Jun 2024புதுச்சேரி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம், பா.ஜ.க.
-
உலகிலேயே சிறந்த பல்கலை கழகங்கள் பட்டியலில் 227-வது இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி.
06 Jun 2024புது டெல்லி, உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., ஆகியவை இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக் கழகம் 383-வது இடத்தை பிடித்துள்ளது.
-
2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது: கோவையில் அண்ணாமலை பேட்டி
06 Jun 2024கோவை, வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதற்கு அண்ணாமலை காரணம்: எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
06 Jun 2024கோவை, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி வந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.