எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1992-ஆம் ஆரம்பிக்கப்பட்ட, சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரி, இந்த ஆண்டு இருபத்தி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி வெள்ளி விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. பாரதியார் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட, ஈரோடு மாவட்ட கல்லூரிகளில் முதன்முறையாக தொடங்கப்பட்ட இருபாலர்களும் பயிலும் சுயநிதிக் கல்லூரி என்ற பெருமைக்குரியது, சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.1992-ஆம் ஆண்டு 3 பாடப்பிரிவுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது 17 இளநிலை பாடப்பிரிவுகளையும், 8 முதுகலைப் பாடப்பிரிவுகளையும், 2 பட்டய ஆராய்ச்சி பாடப் பிரிவுகளையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. வெள்ளி விழா ஆண்டினை ஒட்டி ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஏர்லைன் கேட்டரிங் மேனேஜ்மென்ட் என்ற துறையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் பயன்பெற கல்லூரி நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.
வெள்ளிவிழா மலர்
இவ்விழாவினை, ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர், டி ஜெயலட்சுமி தலைமையேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்கள் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர், கலந்து கொண்டார். வெள்ளி விழாவில் ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை, டாக்டர் ஈ.கே.சகாதேவன் இயக்குநர், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்களை சேன் கட்டிடக்கலை கல்வி நிறுவனம் செயலாளர் டி கிரி, மற்றும். ஈரோடு, ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நிர்வாக இயக்குநா பாலகுமார், ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள். கல்லூரி முதல்வர் பங்கேற்று, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வெள்ளி விழாவையொட்டி வேளாளர் கல்லூரி தாளாளர்சந்திரசேகர், வெள்ளிவிழா மலரினை வெளியிட, லோட்டஸ் மருத்துவமனை இயக்குநர்சகாதேவன் பெற்றுக் கொண்டார்
பல்கலைக்கழகமாக விளங்கும்
வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர், சந்திரசேகர், ஈரோடு பேசுகையில், ஸ்ரீ அம்மன் கல்லூரியின் தாளாளர் தனியொரு பெண்மணியாக இந்த கல்லூரியை ஆரம்பித்து, தற்போது வெள்ளி விழா காண செய்துள்ளார். தாயுள்ளம் படைத்தவர். செய்நன்றி மறவாதவர், பல ஏழை மாணவர்களுக்கு பிறர் அறியாது இலவச கல்வி வழங்கி வருகிறார். வெள்ளிவிழா கண்ட அம்மன் கல்லூரி விரைவில் பல்கலைக்கழகமாக விளங்கும் என கூறினார்.
சிறப்பு விருந்தினராக இவ்விழாவில் பங்கேற்றஈரோடு h லோட்டஸ் மருத்துவமனை, , சகாதேவன், இயக்குநர் பேசுகையில், நாம் பிறக்கும் போது எதுவும் கொண்டுவருவதில்லை. நம் கடின உழைப்பால் மட்டுமே அனைத்தையும் பெற முடியும். ஸ்ரீ அம்மன் கல்லூரியின் தாளாளர் ஜெயலட்சுமி கடின உழைப்பால் தான் முன்னேறியிருக்கிறார். கல்லூரியின் தாளாளரை உதாரணமாக கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் என கூறினார். கடவுள் நமக்கு அளித்தவற்றைக் கொண்டு இன்பமுற வாழ வேண்டும் எனவும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறியதைப் போல் பொது அறிவியல் கல்வியுடன், உணர்ச்சியை கையாளுதல் மற்றும் ஆன்மீக அறிவு ஆகியவற்றையும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், தனி மனிதர்கள் சமுதாயத்திற்கு பங்காற்ற வேண்டுமென்றும், இதையெல்லாம் பயின்று சென்றால் பல்வேறு நாடுகளில் பல்துறை சார்ந்த தொழில்களிலும் நம் தமிழ்நாட்டின் அரசியலிலும் சிறந்த பங்காற்றலாம் என கூறினார்
தாயுள்ளம் படைத்த தாளாளார்
அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பேரவையின் தலைவர். முகமது இம்ரான் பேசுகையில், கல்லூரியின் தாளாளர் அவர்களின், வளர்ச்சிக்கு அவர்களது தன்னம்பிக்கையும், மன வலிமையும், விடா முயற்சியுமே காரணம் என கூறி வெள்ளி விழா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பிறகு, அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவரும், கன்னியாகுமரி குழித்துறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமாகிய அப்துல் சலாம் 1995-ம் ஆண்டு நான் இக்கல்லூரியில் உயர்கல்வி படிப்பதற்காக சேர்ந்தேன். என் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு நமது தாளாளர் என்னை கல்லூரியில் இலவசமாக படிக்க வைத்தார் என நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், தாயுள்ளம் படைத்த தாளாளர் பல மாணவர்களை கட்டணமின்றி படிக்க வைத்து வருகிறார் எனவும் கூறினார்.அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவரும், பேரவையின் செயலாளரும் அவிவா லைப் இன்ஸ்சூரன்ஸ்ஸின் பயிற்சியாளருமான செந்தில் ராஜா நம் கல்லூரி வெள்ளி விழா காண்பது மகிழ்ச்சி அளிக்கிறதென்று கூறி, முன்னாள் மாணவர்கள் “ஆசை” அமைப்பின் சார்பாக வெள்ளி விழா அரங்கம் கட்ட ரூ.40,000 முன்பணமாக வழங்கினார்..
பொன்விழா காண வாழ்த்துகிறோம்
ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மற்றும் அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவர் மக்கள் ஜி ராஜன், பேசுகையில, வெள்ளிவிழா காண்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பொன்விழா காண எங்கள் முன்னாள் மாணவர் அமைப்பு “ஆசை” சார்பாக வாழ்த்துகிறோம் எனவும் கூறினார்.இவ்விழாவில், கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய முன்னாள் முதல்வர்கள், பேராசியர்கள், வழக்கறிஞர் அருட்செல்வன், யாழி. மதிவாணன, தாளாளர் செங்குந்தர் பொறியியல் கல்லூரி ஈரோடு. சாந்தலட்சுமி- செகரட்ரியேட், மருத்துவர் சரோஜா துரைராஜ், முனைவர் சாந்தகுமாரி, அருட்சகோதரி. ரீனா, ஆடிட்டர் துரைசாமி மற்றும் பலர் கலந்துகொண்டு வெள்ளி விழாவினைச் சிறப்பித்தனர்.கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் இறுதியில், சிறப்பாக அமைய உதவிய அனைவருக்கும் மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர். எ ராஜேஷ் நன்றியுரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ அம்மன் கல்லூரியின் முதல்வர் .எம். சதீஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.(
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி
29 Apr 2024மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.