எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - பெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 69வது பிறந்தநாள்; விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நல்லவேலுச்சாமி, ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், மாவட்ட பிரதிநிதி ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமு கூடல் மதன், தேனி மாவட்ட மீனவரணி ராமர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேனி மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ ஏழை எளியோருக்கு பணஉதவி, வேஷ்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காக 32 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுகவை ஆட்சியில் அமர்த்தினர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின் முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் அதிமுகவை சின்னம்மா தான் கட்டுக்கோப்பாக வழிநடத்த முடியும் என்று அவரை பொதுச்செயலாளராக்க முன்மொழிந்தார். அதற்குபின் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுகவை சேர்ந்த துரைமுருகன் அப்போது முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தபோது இவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் அவர் திமுக பக்கம் சாய்கிறாரோ என்ற எண்ணம் வந்ததால் பொதுச்செயலாளர் சின்னம்மாவை முதல்வராக்க அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தோம்;. இதில் உடன்படாத ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியை உடைக்க முயற்சித்தார். அவரை புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் அறிமுகம் செய்து அவரை முதல்வராக தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருந்த சின்னம்மா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முயற்சித்தார்.
ஆனால்அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அதனை தொடர்ந்து நாங்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்ததின்பேரில் ஆளுநர் வித்யாசாகர்ராவ் சட்டசபையில் பலத்தை நிரூபிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் நடைபெற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். எங்களை சண்டைக்கு இழுத்தனர். அப்பொழுது அவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் அதிமுகவின் 122 எம்.எல்.ஏக்களும் அமைதி காத்ததால் இன்று புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி தொடர்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பதவியேற்றதும், கர்ப்பிணி பெண்களுக்கான நிதியை 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்த்தியும், 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, உழைக்கும் மகளிர்களுக்கு 50 சதவிகித மானியத்தில் மொபட் வாங்குவது உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதனால் மக்களிடம் அம்மாவின் ஆட்சி தொடர்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் நகர பொருளாளர் பொன்.ரெங்கராஜ், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் முகுந்தன், நகர மாணவரணி செயலாளர் மருதைதுரைசெல்வம், நகர வங்கி துணைத்தலைவர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் செந்தில்குமார், குபேந்திரன், பாலன், நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் செல்லப்பாண்டி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகமது, அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர் கணேசன், வார்டு செயலாளர்கள் சின்னன், மல்லீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் மேலும் இக்கூட்டத்தில் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளிலிருந்து சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் விஜயம்ராமசாமி ஆலோசனையின்பேரில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. முன்னதாக ஆனந்தனின் அபிகீர்த்தி நடனக்குழு சார்பில் ஆடல்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.