எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஒத்தக்குதிரை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ.வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அமைதி, வளம், வளர்ச்சி என்ற உயரிய நோக்கோடு இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2,05,734 பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி போன்ற கல்வித்தகுதிகளையும், ஓட்டுநர், நடத்துநர் எலக்ட்ரீசியன், பிட்டர், மோட்டார் மெக்கானிக், மருந்தாளுநர், லேப் டெக்னீசியன், நூலக அறிவியல் சான்றிதழ் போன்ற தொழில் நுட்பத் தகுதிகளையும், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் போன்ற ஆசிரியர் கல்வித் தகுதிகளையும் பதிவு செய்து அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து புதிப்பித்து வருகின்றனர். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற பதிவுதாரர்களை ஊக்குவிக்கும் விதிமாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தவறாமல் நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி மாதந்தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மலைப்பகுதியில் வசிக்கும் படித்த இளைஞர்களுக்காக தாளவாடி, பர்கூர், கடம்பூர் மற்றும் ஆசனூர் ஆகிய இடங்களில் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இவைத்தவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் அளிக்கப்படும் பல்வேறு திறன் எய்தும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு உதவி மையம் செயல்பட்டு வருகிறது இம்மையத்தில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவுகள் மேற்கொள்ளுதல், வழிகாட்டும் தகல்கள் அளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் வழங்கும் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 63,946 நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 2015-16-ம் நிதியாண்டில் ரூ.16,90,87,450/- உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெறும் தமிழ்நாடு அரசு வழங்கி வந்த உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி ஆணையிட்டுள்ளது. பள்ளியிறுதி வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ,200/-இ பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களக்கு ரூ.400/-, பட்டதாரிகளுக்கு ரூ.600/- என தற்போது உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் காலாண்டுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஓராண்டு முடிந்தவுடன் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600/-இ 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-, பட்டதாரிகளுக்கு ரூ.1000/- என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி அனைவரும் வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை கே.சி.கருப்பணன் தெரிவித்ததாவது,
அனைவருக்கும் வேலை என்ற உயரிய நோக்கோடு மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்கள். தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக விளங்குகின்றது. அம்மா சிறப்பாக செயல்படுத்திய தொழில்முதலீட்டார்கள் மாநாடு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது. அம்மாநாட்டில் ரூ.2,42,742 கோடி தொழில் முதலீடாக தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம் தரும் அரசாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறந்த கல்வியாளர்களாக மட்டுமல்லாமல் பண்பாளர்களாகவும் இன்றைய இளைய சமுதாயத்தினர் விளங்க வேண்டும். இன்று சிறப்பான முறையில் தொடங்கியிருக்கும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை நல்லமுறையில் பயன்படுத்திகொள்ள வேண்டும்.
இம்முகாமில் 130 இன்ஜினியரிங் மற்றும் 125 பொறியியல் சாராத நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. கோயம்புத்தூரிலிருந்து 70 நிறுவனங்கள், சென்னையிலிருந்து 100 நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 50 நிறுவனங்கள் என பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலளித்து அனைவரும் பணிநியமன ஆணையினை பெற வேண்டும். நீங்கள் அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என தெரிவித்தார்.
இம்முகாமில் ஹ{ண்டாய் மோட்டாஸ், ஈட்சர் மோட்டாஸ், ஐ.டி.சி. லிமிடெட், சாரதா டெரி புராடக்டஸ், ரூட்ஸ் இன்டஸ்டிரிஸ், சாந்தி கியர்ஸ், லட்சுமி மிஷின்ஸ், சக்தி சுகர்ஸ், ஏ.பி.டி. இன்டஸ்டிரிஸ், அப்பல்லோ டயர்ஸ், லான்சன் மோட்டார்ஸ், சக்தி ஆட்டோ காம்பொனன்ட்ஸ், டி.வி.எஸ். மோட்டார்ஸ், எச்.சி.எல், டெக் மகேந்திரா, ஐ.டி.பி.ஐ இன்சூரன்ஸ், ஹெச்.டி.எப்.சி வங்கி, சதர்லேண்ட், டாடா லைப் இன்சூரன்ஸ், முத்தூட் பைனான்ஸ், எல்.ஜி.பி, எல்.ஐ.சி.ஆப் இந்தியா, அமிர்தா பால், செய்ண்ட் கோபியன் மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் உள்ளடங்கும். இவர்கள் பொறியாளர்கள், சூப்பர்வைசர்ஸ், மேனேஜர்ஸ், அட்மினிஸட்ரேட்டர், அக்கவுண்ட், /போர்மேன், மெஷின் ஆப்ரேட்டர்ஸ், ஊNஊ மெஷின் ஆப்ரேட்டர்ஸ், வெல்டர்ஸ், பிட்டர்ஸ், லேத் ஆப்ரேட்டர்ஸ், ஹெல்ப்பர்ஸ், எலக்ட்ரிசியன்ஸ், மோல்டர்ஸ், சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்ஸ் என பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு பதவிகளுக்காக திறனறிந்து பதிவுதாரர்களை தேர்வு செய்தனர்.
இம்முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்) சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), வேலை வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் லதா, இணை இயக்குநர் ஞானசேகரன், உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் சாந்தா, கல்லூரியின் தலைவர் வெங்கடாசலம், கல்லூரியின் நிர்வாக இயக்குனர் க.கௌதம், நிர்வாக உறுப்பினர் கே.சி.கனேசன், ஈரோடு வேலை வாய்ப்பு அலுவலர்கள் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்4 days 8 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 1 day ago |
-
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் பலி
19 May 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 May 2024சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம் நாளை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன்
19 May 2024தென்காசி : குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு 85 பஸ்கள் தினசரி இயக்கம்
19 May 2024சென்னை : கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
நிறைவு பெற்றது ஊட்டி மலர்க்கண்காட்சி: ஆர்வமுடன் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 May 2024ஊட்டி : ஊட்டியில் மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து பூக்களை கண்டுகளித்தனர்.
-
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
19 May 2024புதுடெல்லி : மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரளம் முயற்சி: சட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
19 May 2024சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் மீது தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 May 2024மதுரை : அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
-
மழை எச்சரிக்கை: ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து
19 May 2024நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&n
-
டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் : கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
-
ஆம் ஆத்மி கட்சிக்கு நான் வாக்களிக்க போகிறேன் : பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு
19 May 2024புதுடெல்லி : இந்த தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் சுவாரசியமாக இருக்கும் என்று டெல்லியில் பிரச்சாரம் மேற்க
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
19 May 2024நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம்
19 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டிவி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார்
19 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர
-
வைகாசி மாத பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
19 May 2024விருதுநகர் : வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் ச
-
தமிழகத்தில் பரவலாக கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
19 May 2024சென்னை : தமிழகத்தில் திருவாரூர், திருவள்ளூர், நாகை, சீர்காழி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
-
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : பாதுகாப்பு பணியில் படைவீரர்கள்
19 May 2024லக்னோ : 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
-
மதுரை மாவட்ட தேவைக்காக நாளை முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
19 May 2024மதுரை : மதுரை மாவட்ட தேவைக்காக நாளை 21-ம் தேதி முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை : குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 9 குழுக்களில் 296 படை வீரர்கள் முகாம் : 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்
19 May 2024சென்னை : வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து குமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 296 பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய 9 குழுக
-
அசாமில் கடத்தி வரப்பட்ட ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : முதல்வர் பிஸ்வா சர்மா தகவல்
19 May 2024திஷ்பூர் : அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
-
ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு
19 May 2024புதுடெல்லி : டெல்லிக்காக நான் செய்த பணிகளை மதிப்பிட்டு வாக்களியுங்கள் என தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்ப
-
ஜடேஜா, டோனி போராட்டம் வீண்: 4-வது அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு பெங்களூரு தகுதி
19 May 2024பெங்களூரு : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
-
கொளுத்தும் கோடை வெயில்: டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் உச்சபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரே மைதானத்தில் 3,005 ரன்கள்: விராட் கோலி சாதனை
19 May 2024பெங்களூரு : ஒரே மைதானத்தில் அதிக ரன் குவித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
ரன்-ரேட் ...
-
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து : தேடும் பணிகள் தீவிரம்
19 May 2024டெஹ்ரான் : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.