முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவேரி நதி நீர் பிரச்சனை குறித்து ஜெயலலிதா ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.18 - காவேரி நிதிநீர் பங்கீடு குறித்து நடைபெற்ற விசாரணை குறித்து முதல்வர் ஜெயலிலதா அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். காவேரி நதிநீர் குறித்த காவேரி நடுவர் மன்றத்தின் உத்தரவு குறித்து தமிழக அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனு இன்று விசாரணைக்கு வர இருப்பதால், இந்த இடைக்கால மனு மற்றும் சிறப்பு விடுப்பு மனுவில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முதல்வர்  ஜெயலலிதா தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை அரசுச் செயலாளர், நீர்வள ஆதாரங்களுக்கான தமிழக அரசின் ஆலோசகர் ஏ.மோகனகிருஷ்ணன், காவேரி தொழில்நுட்பக் குழுமத்தின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்  ஏ.நவநீதிகிருஷ்ணன், உச்சநீதிமன்றத்திலுள்ள தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறஞர் எஸ்.குரு கிருஷ்ணகுமார், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் வழக்கறிஞர் ஜி.உமாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்