எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.- விருதுநகர் மாவட்டம், சிவகாசி டான்பாமா திருமண மண்டபத்தில் விபத்தில்லா பட்டாசு தொழில் மேற்கொள்வது குறித்து அனைத்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் போர்மென்களுடனான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம். தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது :-
விருதுநகர் மாவட்டத்தில், சமீப காலமாக பட்டாசுத் தொழிற்சாலைகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வெடிவிபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றினைத் தடுக்கும் பொருட்டு இந்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இம்முகாமின் முக்கிய நோக்கமே பட்டாசு தொழிற்சாலைகளில் அடிப்படை நடைமுறைகள் பின்பற்றப்படுவதன் அவசியத்தினை எடுத்துரைக்கவே ஆகும்.
பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட முக்கிய காரணம் கவனக்குறைவே ஆகும். உரிமத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள பட்டாசு இனங்களை மட்டுமே உரிம நிபந்தனைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்ய வேண்டும். உரிமம் அளிக்கப்பட்ட தொழிற்சாலை பகுதிக்குள் மட்டுமே பட்டாசு இனங்களை உற்பத்தி செய்யவேண்டும். அனுமதி அளிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் மட்டுமே தொழிலாளர்களை ஈடுபடுத்தப்பட வேண்டும். உரிமதாரர் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும். தொழிற்சாலையை குத்தகைக்கு விடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மேற்கண்ட அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதனால் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி செய்ய முடியும். விபத்தில்லா பட்டாசு உற்பத்தியினை உறுதி செய்யவும், அனுமதி பெறாதா பட்டாசு உற்பத்தி நிலையங்களை கண்டறியவும் வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் அடங்கிய நான்கு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்காண்காணிப்புக்குழுக்கள் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளை திடீர் தணிக்கை செய்து, தணிக்கையின் போது விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு விபத்தில்லா பட்டாசு உற்பத்தியை உறுதி செய்யும் நோக்கில் எண்ணற்ற பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்துள்ளது. பட்டாசு உற்பத்தியாளர்கள் அதனை முழுமையாக பின்பற்றி அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியை உறுதிசெய்யமுடியும். ஒரு சில பட்டாசு தொழிற்சாலையில் ஒரே நாளில் அதிக பணிகள் செய்து நிறைய வருமானம் ஈட்ட வேண்டும் என்ற தவறான எண்ணத்தினால் தான் விபத்துக்கள் நடைபெறுகிறது. தொழிற்சாலைகள் முதல் பணியாக தங்கள் தொழிற்சாலையில் ஆவணங்களை முறையாகப்பயன்படுத்த வேண்டும். ஒரு நிலையான வழிமுறை கொண்ட பட்டாசு உற்பத்தியினை மேற்கொண்டு விபத்தில்லா பட்டாசு உற்பத்தியினை மேற்கொள்ள அனைத்து பட்டாசு உற்பத்தியாளர்களும் முன்வர வேண்டும்.
சட்ட விரோதமாக வெடி பொருள் உற்பத்தியை தூண்டும் இடைத்தரகர்களின் பேச்சைக் கேட்டு ஏமார வேண்டாம், அரசு உரிமமின்றி கள்ளத்தனமாக பட்டாசு உற்பத்தி செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பட்டாசு தொழிற்சாலையின் கட்டிடத்தினை விட்டு, மரத்தடியிலோ அல்லது திறந்த வெளியிலோ பட்டாசு தயாரிப்பு செய்வது பொதுமக்களுக்கு தெரிய வந்தால் வருவாய் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க முன் வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள்.
மேலும், இக்கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை நிர்வாகிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன்.இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், சிவகாசி சாராட்சியர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., இணை இயக்குநர் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் சீனிராஜ், இணை இயக்குநர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பாலகிருஷ்ணன், தனி வட்டாசியர் சங்கரபாண்டியன் உட்பட அரசுதுறை உயர் அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், போர்மேன்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 day 6 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்5 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 1 day ago |
-
தொடர் மழை: ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து
23 May 2024ஊட்டி, தொடர்மழை காரணமாக தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை நேற்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
-
பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து பயன்படுத்தும் புதுவை முதல்வர்
23 May 2024புதுச்சேரி, தனது பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து புதுவை முதல்வர் பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
-
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
23 May 2024பெங்களூரு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-05-2024.
23 May 2024 -
தைவானை சுற்றி சீனா திடீர் போர்ப் பயிற்சி
23 May 2024பெய்ஜிங், தைவானை சுற்றி சீனா நேற்று காலை திடீரென 2 நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மெக்சிகோவில் பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு
23 May 2024மெக்சிகோ, மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
குற்றால அருவியின் மேல் பகுதியில் அண்ணா பல்கலை.யின் பேராசிரியர் குழு ஆய்வு
23 May 2024தென்காசி, திடீர் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், வெள்ளப் பெருக்கை முன்கூட்டியே கண்காணிக்கவும் நவீன சென்சார் கருவிகளை பொருத்த வனத்துறை உதவியுடன் குற
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
23 May 2024நெல்லை, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்கியது: 63,433 பேர் இடமாற்றம் கோரி விண்ணப்பம்
23 May 2024சென்னை, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் ஜூன் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
-
கன்னியாகுமரி கடற்கரையில் பகவதியம்மனுக்கு ஆறாட்டு
23 May 2024குமரி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை திரிவேணி சங்கம கடற்பகுதியில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது.
-
கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் ஏழைகளுக்காக எதுவும் செய்யவில்லை: பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு
23 May 2024புது டெல்லி, கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் மோடி ஏழைகளுக்காக எதுவும் செய்வதில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
சென்னையை தொடர்ந்து சம்பவம்: கோவையில் நாய் கடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை
23 May 2024கோவை, கோவை அருகே வளர்ப்பு நாய் கடித்து 10 வயது சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாசார மையம் கட்ட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 May 2024சென்னை, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில், கலாசார மைய கட்டுமான பணிகளை வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் படிக்க சேர்க்கை ஆணை: மாணவிக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
23 May 2024சென்னை, சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி ஷரினாகிறிஸ்டுக்
-
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மே மாத இறுதிக்குள் 5 ஏ.டி.எம். மையங்கள் பயன்பாட்டுக்கு வரும்: சி.எம்.டி.ஏ. அறிவிப்பு
23 May 2024சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இந்த மாத இறுதிக்குள் 5 ஏ.டி.எம்.
-
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாக். அரசு திட்டம்
23 May 2024இஸ்லாமாபாத், நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு உள்ளது.
-
இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல்: ரிஷி சுனக் அறிவிப்பு
23 May 2024லண்டன், இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
-
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: ரோடுஷோவில் பிரியங்கா குற்றச்சாட்டு
23 May 2024சண்டிகர், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
-
குருவை ஏமாற்றியவர் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்? ராஜ்நாத் சிங் கேள்வி
23 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அவரது குரு அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர். அவர், எப்படி மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்?
-
நான், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலாளி: அரியானாவில் பிரதமர் மோடி பேச்சு
23 May 2024சண்டிகர், நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என தெரிவித்த பிரதமர் மோடி, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலாளி
-
தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன: பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்
23 May 2024சென்னை, கனமழை காரணமாக தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
-
முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்டுவது சட்டவிரோதமானது: செல்வப்பெருந்தகை கண்டனம்
23 May 2024சென்னை, முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் மத்திய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியிருப்பதாக வந்திருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை
-
ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மம்தா கடும் எதிர்ப்பு
23 May 2024கொல்கத்தா, 37 பிரிவினருக்கு வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
வங்கக்கடலில் நாளை உருவாகிறது ரீமால் புயல்: தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
23 May 2024புதுடெல்லி, வங்கக்கடலில் உருவாக உள்ள தீவிர புயலுக்கு ரீமால் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், வருகிற 26ம் தேதி இந்த புயல் மேற்குவங்காளத்திற்கு அருகே கரையை கடக்கும் என
-
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: சென்னை போலீசார் தீவிர விசாரணை
23 May 2024சென்னை, சென்னை என்.ஐ.ஏ.