எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் காம்பீர்–உத்தப்பா ஜோடியின் அரைசதத்தின் உதவியுடன் கொல்கத்தா அணி எளிதில் வெற்றியை ருசித்தது. 9–வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 7–வது வெற்றியாகும்.
8 அணிகள்
8 அணிகள் பங்கேற்றுள்ள 10–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
32-வது லீக்
இந்த நிலையில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் மாலை நடந்த 32–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி டெர்டெவில்சை எதிர்கொண்டது. கொல்கத்தா அணியில் இரு மாற்றமாக டேரன் பிராவோ, பியுஷ் சாவ்லா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நாதன் கவுல்டர்–நிலே, ஷெல்டன் ஜாக்சன் சேர்க்கப்பட்டனர். டெல்லி அணியில் ஆதித்ய தாரேவுக்கு பதிலாக அங்கித் பாவ்னே இடம் பெற்றார்.
சிறப்பான தொடக்கம்
‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சனும், கருண் நாயரும் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். முதல் 4 ஓவர்களில் 41 ரன்களை திரட்டிய இந்த ஜோடியின் வேகத்துக்கு, சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் முட்டுக்கட்டை போட்டார். அவரது பந்தில் கருண் நாயர் (15 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அபார பந்துவீச்சு
அதன் பிறகு சஞ்சு சாம்சனுடன், ஸ்ரேயாஸ் அய்யர் கைகோர்த்து இருவரும் சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினர். சஞ்சு சாம்சன் 60 ரன்கள் (38 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது, அந்த அணி எப்படியும் 180 ரன்களை தாண்டும் போல் தோன்றியது. ஆனால் இறுதிகட்டத்தில் அருமையாக பந்து வீசிய கொல்கத்தா பவுலர்கள், கடைசி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுளை சாய்த்து வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினர்.
160 ரன்கள்
20 ஓவர் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் தனது பங்குக்கு 47 ரன்கள் (34 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். கொல்கத்தா தரப்பில் நாதன் கவுல்டர்–நிலே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உத்தபா அதிரடி
அடுத்து 161 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரின் 4 ரன்னில் கிளீன் போல்டு ஆனார். இதன் பின்னர் கேப்டன் கவுதம் கம்பீரும், ராபின் உத்தப்பாவும் கூட்டணி அமைத்து அணியை நிமிர வைத்தனர். உத்தப்பா 9 ரன்களில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிபிழைத்தார். அதாவது அவர் தூக்கியடித்த பந்தை கேட்ச் செய்ய சஞ்சு சாம்சனும், அமித் மிஸ்ராவும் ஓடி வந்தனர். ஆனால் அவர் பிடிப்பார் என்று இவரும், இவர் பிடிப்பார் என்று அவரும் நினைத்து கேட்ச் செய்யாமல் நின்று விட்டனர். இரண்டு பேருக்கும் நடுவில் பந்து விழுந்தது.
டெல்லிக்கு பின்னடைவு
இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட உத்தப்பா, அதன் பிறகு சரவெடி ஆட்டத்தால் ரசிகர்களை குஷிப்படுத்தினார். கிறிஸ் மோரிஸ் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்ட உத்தப்பா, கம்மின்சின் பந்து வீச்சிலும் ஒரு சிக்சரை விரட்டி அமர்க்களப்படுத்தினார். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டெல்லி கேப்டன் ஜாகீர்கான் தசைப்பிடிப்பால் 1.1 ஓவர் மட்டுமே வீசினார். இது கொல்கத்தாவுக்கு இன்னும் வசதியாக போய் விட்டது. 24 பந்துகளில் அரைசதத்தை எட்டிய உத்தப்பா 59 ரன்களில் (33 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) ரன்–அவுட் ஆனார். இந்த சீசனில் அவரது 4–வது அரைசதம் இதுவாகும். அடுத்து வந்த மனிஷ் பாண்டே 5 ரன்னில் வெளியேறினார்.
கொல்கத்தா வெற்றி
மறுமுனையில் நிலைத்து நின்று அரைசதத்தை பூர்த்தி செய்த காம்பீர் வெற்றிகரமாக இலக்கை எட்ட வைத்தார். கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காம்பீர் 71 ரன்களுடனும் (52 பந்து, 11 பவுண்டரி), ஷெல்டன் ஜாக்சன் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 9–வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 7–வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி பிளே–ஆப் சுற்று வாய்ப்பை வெகுவாக நெருங்கியுள்ளது. கொல்கத்தா அணி இங்கு 2012–ம் ஆண்டுக்கு பிறகு ‘சேசிங்’ செய்த ஆட்டங்களில் (13 ஆட்டம்) தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணிக்கு இது 5–வது தோல்வியாகும்.
வெற்றிக் குறித்து காம்பீர்:
‘ஒரு கட்டத்தில் டெல்லி அணி 180 ரன்கள் முதல் 190 ரன்கள் வரை குவிக்கும் என்று நினைத்தோம். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை எங்களுக்கு சாதமாக கொண்டு வந்து விட்டனர். இந்த தொடரில் இதுவரையிலான எங்களது அணியின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது. ஆனால் இது போன்ற போட்டித் தொடரில் நாம் மெத்தனமாக இருக்க முடியாது’ என்றார். 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள காம்பீர் 4 அரைசதம் உள்பட 376 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். மீண்டும் அவர் ஆரஞ்சு நிற தொப்பியை தனதாக்கி இருக்கிறார்.
தோல்வி குறித்து ஜாகீர்கான்:
‘160 ரன்களை கொண்டு வெற்றி பெற்றிருக்கலாம். இந்த ஆடுகளத்தில் இது போதுமான ஸ்கோர் தான். ஆனால் எனது தசைப்பிடிப்பு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. இதே போல் உத்தப்பா கொடுத்த கேட்ச் வாய்ப்பை பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். எதிர்பார்த்ததை விட 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஒருங்கிணைந்து விளையாடி வெற்றிப்பாதைக்கு திரும்புவது அவசியம்’ என்றார்.
சாதனைகளை படைத்த கம்பீர்
கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் சேகரித்ததுடன் பல சாதனைகளையும் படைத்தார். கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் நேற்று முன்தினம் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் சேகரித்ததுடன் பல சாதனைகளையும் படைத்தார். ஐ.பி.எல். போட்டியில் 4 ஆயிரம் ரன்களை (141 ஆட்டத்தில் 4,010 ரன்) கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா (4,407 ரன்), பெங்களூரு கேப்டன் விராட் கோலி (4,274 ரன்) முதல் இரு இடங்களில் உள்ளனர்.
எல்லாவகையான 20 ஓவர் கிரிக்கெட்டையும் சேர்த்து 6 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை எட்டிய 13-வது வீரர், இந்திய அளவில் 4-வது வீரர் என்ற சிறப்புக்கும் கம்பீர் சொந்தக்காரர் ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் கம்பீர் 229 ஆட்டங்களில் விளையாடி 6,023 ரன்கள் குவித்துள்ளார். ரெய்னா, கோலி, ரோகித் சர்மா ஏற்கனவே 6 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
ஐ.பி.எல்.-ல் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் (3,311 ரன்) என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இந்த வரிசையில் டோனி (3,270 ரன்) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த ஆட்டத்தில் கம்பீரும், உத்தப்பாவும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் திரட்டினர். இதன் மூலம் இலக்கை துரத்திப்பிடிக்கையில் (சேசிங்) அதிக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் (4-வது முறை) கொடுத்த ஜோடி என்ற மகிமையும் இவர்களுக்கு கிடைத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 day 18 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்5 days 18 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 1 day ago |
-
பணி நேரத்தை முறையாக கடைபிடிக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு
23 May 2024சென்னை:ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து பயன்படுத்தும் புதுவை முதல்வர்
23 May 2024புதுச்சேரி, தனது பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து புதுவை முதல்வர் பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
-
தொடர் மழை: ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து
23 May 2024ஊட்டி, தொடர்மழை காரணமாக தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை நேற்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
-
உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்கள் மூலம் வேளாண்மைத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
23 May 2024சென்னை, உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வேளாண்மைத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
23 May 2024பெங்களூரு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு அவசர ஆலோசனை: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடந்தது
23 May 2024சென்னை, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சியை தடுப்பது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா தலமையில் நேற்று அவசர ஆலோசனை நடந்தது.
-
மெக்சிகோவில் பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு
23 May 2024மெக்சிகோ, மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
தைவானை சுற்றி சீனா திடீர் போர்ப் பயிற்சி
23 May 2024பெய்ஜிங், தைவானை சுற்றி சீனா நேற்று காலை திடீரென 2 நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சென்னையை தொடர்ந்து சம்பவம்: கோவையில் நாய் கடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை
23 May 2024கோவை, கோவை அருகே வளர்ப்பு நாய் கடித்து 10 வயது சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-05-2024.
23 May 2024 -
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
23 May 2024நெல்லை, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
குற்றால அருவியின் மேல் பகுதியில் அண்ணா பல்கலை.யின் பேராசிரியர் குழு ஆய்வு
23 May 2024தென்காசி, திடீர் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், வெள்ளப் பெருக்கை முன்கூட்டியே கண்காணிக்கவும் நவீன சென்சார் கருவிகளை பொருத்த வனத்துறை உதவியுடன் குற
-
தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகள் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ல் தொடக்கம்: ரேங்க் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியீடு
23 May 2024சென்னை, தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ல் தொடங்குகிறது.
-
கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் ஏழைகளுக்காக எதுவும் செய்யவில்லை: பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு
23 May 2024புது டெல்லி, கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் மோடி ஏழைகளுக்காக எதுவும் செய்வதில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் படிக்க சேர்க்கை ஆணை: மாணவிக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
23 May 2024சென்னை, சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி ஷரினாகிறிஸ்டுக்
-
கன்னியாகுமரி கடற்கரையில் பகவதியம்மனுக்கு ஆறாட்டு
23 May 2024குமரி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை திரிவேணி சங்கம கடற்பகுதியில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது.
-
வங்கக்கடலில் நாளை உருவாகிறது ரீமால் புயல்: தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
23 May 2024புதுடெல்லி, வங்கக்கடலில் உருவாக உள்ள தீவிர புயலுக்கு ரீமால் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், வருகிற 26ம் தேதி இந்த புயல் மேற்குவங்காளத்திற்கு அருகே கரையை கடக்கும் என
-
கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாசார மையம் கட்ட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 May 2024சென்னை, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில், கலாசார மைய கட்டுமான பணிகளை வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்கியது: 63,433 பேர் இடமாற்றம் கோரி விண்ணப்பம்
23 May 2024சென்னை, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் ஜூன் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
-
இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல்: ரிஷி சுனக் அறிவிப்பு
23 May 2024லண்டன், இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
-
பழைய பேருந்துகளை மாற்றாததற்கு காரணம் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
23 May 2024சென்னை:தமிழகத்தில் உள்ள எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயங்கப்படும் காலாவதியான மாநகரப் பேருந்துகள் மாற்றப்படாமல் இருக்க கொரோனா பொதுமுடக்கமே காரணம் என போக்குவரத்
-
ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி யு.ஏ.இ. கவுரவம்
23 May 2024துபாய்:ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி
-
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாக். அரசு திட்டம்
23 May 2024இஸ்லாமாபாத், நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு உள்ளது.
-
மெயின் அருவியை தவிர குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
23 May 2024தென்காசி:குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க நேற்று மாலை முதல் அனுமதி வழங்கபட்டுள்ளது.
-
நக்சல் தாக்குதலில் 7 போலீசார் பலி: 19 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது
23 May 2024பெங்களூரு, காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தி 7 பேரை கொன்று துப்பாக்கி, தோட்டாக்களைக் கொள்ளையடித்த வழக்கில் 19 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட் பெங்களூருவில் கைது செ