எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.- 9 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை- சேப்பாக்கம் ஸ்டேடியம் உட்பட இந்தியாவின் முக்கிய 8 ஸ்டேடியங்களில் சிலவற்றில் பாகிஸ்தானின் லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அதிரடிப்படை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு:-
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றன. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்பட 8 நகரங்களில் இந்த போட்டி நடந்து வருகிறது. இந்த 8 மைதானங்களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு மைதானங்களில் தற்கொலை தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதை உளவு நிறுவனங்கள் கண்டுபிடித்து எச்சரித்தன. லஷ்கர்இதொய்பா தீவிரவாதி ஜெய்புதீன் அன் சாரியும், அவனது கூட்டாளிகளும் கடந்த ஆண்டு இந்தியா வந்து நோட்டமிட்டு சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இஸ்ரேல் உளவுத் துறையும் உலக கோப்பை கிரிக்கெட்டை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளில் சிலர் ஊடுருவி உள்ளனர் என்று எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் ஆமதாபாத்தில் உள்ள சர்தார்படேல் ஸ்டேடியம், பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம், சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 ஸ்டேடியங்களைத் தகர்க்க குறி வைத்திருப்பது தெரிய வந்தது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள 8 ஸ்டேடியங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும்படியும், உஷாராக இருக்கும்படியும் தமிழக அரசை மத்திய உள் துறை தற்போது அறிவுறுத்தி உள்ளது. இதன் முலம் சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு அதிக தாக்குதல் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.
சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வருகிற 16 மற்றும் 20-ந்தேதிகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 16-ந்தேதி நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தும் மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் போட்டியில் இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அந்த ஆட்டமும் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகள் மிரட்டலைத் தொடர்ந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக இங்கு நடக்கும் போட்டிகளில் 500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் சுமார் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீவிரவாதி அன்சாரி, இந்தியாவில் உள்ள முஜாகி தீன்களை ஸ்டேடியத்துக்குள் அனுப்பி, ரசாயண கலவைகளை சேர்த்து நாச வேலைக்கு முயற்சி செய்யலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் பார்வையாளர்கள் கைப்பை, குளிர்பானங்கள் எடுத்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் நாட்களில் 36 மணி நேரத்துக்கு முன்பு இருந்தே ஸ்டேடியமும் அதன் நான்கு புற சாலைகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும். பார்வையாளர்களை சோதித்து உள்ளே அனுப்பும் பணியில் கமாண்டோ படை வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். 16 நுழைவாயில்களிலும் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே மைதானத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஸ்டேடியத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சோதிக்கப்படும். போட்டி தொடங்கும் முன்பு ஸ்டேடியத்தை சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் 4 வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். கார்களில் வருபவர்கள் அந்த கார் எண்ணுடன் கொடுக்கப்பட்டுள்ள பாஸ் ஒட்டி இருந்தால்தான் பார்க் கிங் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மைதானம் முழுவதையும் தெளிவாக கண்காணிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒரு காமிரா அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவரும் அமர்ந்து பார்வையாளர்களை கண்காணிப்பார். இவை தவிர அவசர தேவைக்காக மைதானத்தில் 100 அதிரடிப்படை வீரர்களும் தயார் நிலையில் இருப்பார்கள். சந்தேகப்படும் நபர்களிடம் முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறினார். சேப்பாக்கம் அருகில் உள்ள லாட்ஜுகளில் அதிரடி சோதனைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை துணைக் கமிஷனர் சாரங்கன், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் மயில்வாகனன், உதவிக் கமிஷனர் தமிழ்ச் செல்வன், இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் போலீசார் செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்: கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
06 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி
06 May 2024புதுடெல்லி : இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி இடம்பெற்றுள்ளது.
-
சென்னையில் நாய்கள் கடித்து படுகாயம்: சிறுமியின் மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் : மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
06 May 2024சென்னை : சென்னையில் நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் த
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு : உதவி எண்களும் அறிவிப்பு
06 May 2024சென்னை : 2023-2024-ம் ஆண்டு 12- வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு
-
கடந்த 23 ஆண்டுகளில் பிரதமர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
06 May 2024கொல்கத்தா : '23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார்.
-
'நீட் தேர்வு' வினாத்தாள் கசிவா? - தேசிய தேர்வு முகமை விளக்கம்
06 May 2024சென்னை : ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
-
அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோடையில் மக்கள் கடும் அவதி: தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
06 May 2024சென்னை, அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ராகுலை விமர்சித்து விடியோ வெளியீடு: பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு
06 May 2024பெங்களூரு : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரை விமர்சித்து பாஜக விடியோ வெளியிட்ட விவகாரத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்
-
லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
06 May 2024லக்னோ : ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டத்தில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
06 May 2024டெல்லி : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.வும், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவுக்கு ஜாமீன் மற
-
டாஸில் தோற்றாலும் போட்டியில் வெற்றி : ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்
06 May 2024லக்னோ : டாஸில் தோற்றாலும் ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு : 94 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது
06 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
எம்.எஸ்.டோனி புதிய சாதனை
06 May 2024ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு
06 May 2024டெல்லி : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மர்மமாக உயிரிழந்த காங். தலைவர் ஜெயக்குமாரின் செல்போன் மாயம்: நெல்லை போலீசார் தீவிர விசாரணை
06 May 2024நெல்லை : மர்மமாக உயிரிழந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன
-
சிறந்த வீரர் - வீராங்கனை விருது: ஏப்ரல் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
06 May 2024துபாய் : ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
-
அதிகமுறை ஆட்டநாயகன் விருது: ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை
06 May 2024தர்மசாலா : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
தர்மசாலாவில்...