முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் கடனில் ரூ.2 லட்சம் தள்ளுபடி: பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகார் : விவசாயிகள் கடன்களில் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படுவதாக பஞ்சாப் சட்டப்பேரவையில் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவிப்பை வெளியிட்டார்.

பஞ்சாபில் உள்ள சிறு விவசாயிகளின் கடன்கள் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். அதேபோல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும். மற்ற விவசாயிகள் எவ்வளவு கடன் வாங்கியிருந்தாலும், அதில் ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும்.

கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள 8.75 லட்சம் விவசாயிகள் உட்பட மொத்தம் 10.25 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து