முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயக்கட்டு நிலங்களுக்கு இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜன.- 8 - பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம் பருவ பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம் பருவ பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள கீழ்பவானி திட்ட ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம் பருவ பாசனத்திற்காக (8.1.2012) இன்று முதல் தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டுள்ளேன். இதனால், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.    இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்