எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,தலைமைச் செயலகம், மருத்துவமனை, நீதிமன்றம், குடிநீர், தெருவிளக்கு, டெலிபோன் டவர் போன்றவற்றிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கலந்தாய்வுக் கூட்டம்...தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மழை காலத்தில் மின்விபத்துக்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் செய்தல் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் மின்வாரிய உயர்அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர் பருவமழை முன்னெச்சரிக்கையாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து அமைச்சர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆலோசனை மேற்கொண்டார்.
அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்...தமிழகத்தில் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் போர்கால அடிப்படையில் பழுது மற்றும் சேதங்களை சரிசெய்து மின்விநியோகிக்கும் பணியினை சிறப்பாக செய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில்அனைத்து அலுவலர்களும் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடுவதோடு தயார்நிலையில் இருக்கவேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் முதன்மை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. மீதி உள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளையும் ஒரிருநாட்களில் முடித்திட வேண்டும். அனைத்து அத்தியாவசிய நிறுவனங்களுக்கும் மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இனைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
1) சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் மற்றும் நீரில் மூழ்கும் புதைவடங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தமிழ்நாடு மின்சார வாரிய பிரிவு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துமாறு மின்துறை துறை அமைச்சர் தங்கமணி அறிவுரை வழங்கினார். இவைதவிர, பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு ஒலி நாடாவை மக்களிடையே விளம்பரம் படுத்த வேண்டும்.
2) துணை மின்நிலையங்களில் மழைநீர் புகாமல் இருக்கவும் அப்படி மழைநீர் தேங்கினால் அதை வெளியேற்றிட மின் மோட்டர்கள் மற்றும் பம்புசெட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
3) மின் வழிதடங்கள், மின் மாற்றிகள் அனைத்தையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்து தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
4) பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்பகிர்மானப் பெட்டிகள் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும்.
5) மின்கம்பிகள் தொங்கிய நிலையில் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும்.
6) மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ள நேரங்களில் மாவட்ட நிர்வாகம் நடத்தும் ஆலோசனை கூட்டங்களில் மேற்பார்வை பொறியாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு அறிவுரைக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
7) மின்பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
8) தலைமைச் செயலகம், மருத்துவமனை, நீதிமன்றம், குடிநீர், தெருவிளக்கு, டெலிபோன் டவர் போன்றவற்றிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும். இருப்பினும் இவ்வலுவலகங்கள் மின்சாரத்திற்கு மாற்றாக ஜெனரோட்டர் வசதிகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும் தகவல்களை உடனுக்குடன் தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவித்து கோரிக்கை மற்றும் பழுதுகளை சரிசெய்து சீரான மின்விநியோகம் வழங்கிட அனைத்து அலுவலர்களும் சிறப்பாக ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு கலந்தாய்வுக் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.
இக் கூட்டத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர்., இணை மேலாண்மை இயக்குநர். பி.என். ஸ்ரீதர்., நிர்வாக இயக்குநர் சி. சண்முகம் மற்றும் மின்வாரிய இயக்குநர்கள் ஹெலன்,. செந்தில் வேலன், . மு. சந்திரசேகர், எஸ். கீதா,. ஆக்ஸிலியம் ஜெயமேரி, மகேஸ்வரிபாய்,. சுந்தரவதனம் மற்றும் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி
29 Apr 2024மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.