எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பக்ரீத் பண்டிகையையொட்டி கவர்னர் ரோசய்யா - தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் ரோசய்யா:– கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தியாக திருநாளான இந்த பண்டிகை சகோதரத்துவம், நல்லிணக்கத்தை மேம்படுத்தட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி:– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:– தியாகத்திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.‘இஸ்லாம்’ என்பது ஒரு சமயம் அல்லது மதம் என்று கூறுவதைவிட, அது ஒரு ‘வாழ்க்கை நெறி’ என்றே கூறலாம் என பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் எக்காலத்திலும், எந்நாளிலும் இஸ்லாமிய மக்களின்பால் பரிவு கொண்டுள்ள இயக்கமாகும்.இஸ்லாமிய சமுதாய மக்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்தி வரும் உணர்வோடு; பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உடன் பிறப்புகளின் குடும்பத்தார் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகி இன்பம் நிலவிட எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:– தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–தியாகத் திருநாள் என்று கூறப்படும் பக்ரீத் பண்டிகையை, இஸ்லாமிய சமுதாய மக்கள் குர்பானி வழங்கி கொண்டாடி வருகிறார்கள். ஏழை, பணக்காரன், இருப்பவர், இல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கின்ற எவ்வித பாகுபாடும் இல்லாமல் தியாகத்தையும், ஈகையையும் போற்றுகின்ற வகையில் இந்தநாள் கொண்டாடப்படுகிறது. அனைவரும் பகிர்ந்துண்டு வாழுகின்ற, சமதர்ம நெறியை போற்றும் வகையில் குர்பானி வழங்கி கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–
உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும்.இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் இசுலாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்:– இந்த வருடம் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் முதல் பிறை தெரிந்ததால் வருகின்ற 24 ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.ஏழை, எளிய மக்களுக்கு உதவுகின்ற இந்த தியாகத் திருநாளில் நாம் “நமது இஸ்லாமிய சமுதாயத்தினர் மீது அன்பு பாராட்டுவோம்; அவர்களுக்கு அரணாக இருப்போம்; அவர்களையும் அரவணைத்து இந்தியாவை வளமும், வலுவும் உள்ள நாடாக உருவாக்குவோம்’’ என சபதம் ஏற்போம்.இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்துடனும் இணைந்து நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:– ‘குர்பான்’ என்றால் அரபியில் ‘நெருக்கத்தை ஏற்படுத்துதல்’ ஆகும். ‘குர்பானி’ என்ற உருது சொல் ‘தியாகப் பிராணி’ என்று பொருள் தரும். ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, இறைவனுக்காக தியாகத்தைச் செய்வதன் மூலம் அவனது நெருக்கத்தைப் பெற்றிட முடியும் என்று வலியுறுத்தும் இத்தியாகத் திருநாளில் தியாகத்தால் பிறந்து, தியாகத்தால் வளர்ந்து, தியாகத்தால் இயங்கி வரும் ம.தி.மு.க. சார்பில் எனது நெஞ்சார்ந்த தியாகப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:– உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ‘‘தியாகத்திருநாள்’’ என்று போற்றப்படும் பக்ரீத் பண்டிகையாகும்.இந்த இனிய திருநாள் உலகெங்கும் எந்நாளும் சகோதரத்துவம் தழைத்தோங்கும் விதமாகவும், சமத்துவமும் சமாதானமும் நிலைத்திருக்கும் விதமாகவும், அனைத்து இதயங்களிலும் அன்பைப் பரிமாறும் நன்னாளாகப் பரிணமிக்கட்டும்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:– இப்ராஹிம் நபி இறைவன் ஒருவனே என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தம்முடைய மார்க்கத்தின் செய்தியாக அளித்தவர். அவரின் இறைபக்தி எல்லையிலாது, ஈடில்லாதது. தம்முடைய மகனான இஸ்மாயிலை அவனுடைய முழு சம்மதத்துடன் இறைவனுக்கு காணிக்கையாக்க முனைந்த தியாக செயலை நினைவு கூறும் தியாகத் திருநாளே ஹஜ் பெருநாள் என்னும் பக்ரீத் பெருநாளாகும்.இந்த புனித திருநாளாம் பக்ரீத் நந்நாளில், நாட்டு மக்கள் அனைவரும் மதவேற்றுமைகளை கடந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு நம் நாட்டினை எதிர் நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க சூளுரை மேற்கொள்ள வேண்டும். மேலும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் வருமாறு:– அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகி தலைவர் டாக்டர் சேதுராமன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, அகில இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இளையத்துல்லா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 18 hours ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்1 week 3 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 14 hours ago |
-
பப்புவா நியூ கினியாவில் போப் சுற்றுப்பயணம்: மோதலை கைவிட பழங்குடியினருக்கு வேண்டுகோள்
07 Sep 2024போர்ட் மோர்ஸ்பி, பப்புவா நியூ கினியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் பழங்குடியின மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வேண்டுகோள் வ
-
இ-ஆபீஸ் வழியே தமிழக அரசு பணி தொடர்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
07 Sep 2024சான் பிரான்சிஸ்கோ, அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி தொடர்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.
-
பேச்சாளர் மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு விளக்கம்
07 Sep 2024சென்னை, ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா பேட்டியளித்துள்ளார்.
-
அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு எதிரொலி: ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு கைது: * 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு * வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
07 Sep 2024சென்னை, அரசுப்பள்ளியில் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
-
மீனவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
07 Sep 2024சென்னை, வரும் 9-ம் தேதி தூத்துக்குடி மீனவர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
07 Sep 2024தஞ்சாவூர், ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு விவகாரத்தை தொடர்ந்து பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்ச
-
தமிழகத்தில் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
07 Sep 2024சென்னை, தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,000 கனஅடியாக அதிகரிப்பு
07 Sep 2024ஈரோடு, நீலகிரியில் பரவலாக மழை பெய்ததால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 6,431 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
07 Sep 2024சென்னை, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு
07 Sep 2024சென்னை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
-
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
07 Sep 2024சென்னை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
தமிழக வங்கி சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம்: அமெரிக்காவில் வங்கி அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
07 Sep 2024சிகாகோ, தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவின் பிஎன்ஓய் மேலன் அத
-
விநாயகர் சதுர்த்தி திருநாள்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
07 Sep 2024புது டெல்லி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி.
-
நவ.1-முதல் படப்பிடிப்பு ரத்து என சினிமா தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு: பரிசீலனை செய்ய தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல்
07 Sep 2024சென்னை, நவம்பர் 1-ம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்ற அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தி உ
-
வெள்ள ஆய்வின் போது திடீரென எதிரே வந்த ரயில் உயிர் தப்பிய சந்திரபாபு நாயுடு
07 Sep 2024விஜயவாடா, பாலத்தில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த போது ரயில் வர, பாதுகாவலர்களால் நூலிழையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்
-
இன்று பாராலிம்பிக் நிறைவு விழா
07 Sep 2024மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
-
வேலி தாண்டிய பாக். ஆடுகள்: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வந்து புது பிரச்சனை
07 Sep 2024ஜெய்ப்பூர், வேலி தாண்டி, இந்திய எல்லைக்குள் புகுந்த ஆடுகளை என்ன செய்வது என்று தெரியாமல், எல்லைப் பாதுகாப்பு படையினர் பரிதவிக்கின்றனர்.
-
குரூப் 1 தேர்வு மூலச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
07 Sep 2024சென்னை, குரூப் 1 தேர்வு மூல சான்றிதழை வரும் 16-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
-
புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தில் ரூ.10 ஆயிரம் நிதியுதவி: உயர்கல்வி துறை தகவல்
07 Sep 2024சென்னை, தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10,000 வரை நிதியுதவி அளிக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித் துறை தெரிவித்
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பை விட ஹாரிசின் பிரச்சார குழுவுக்கு 3 மடங்கு அதிக நன்கொடை
07 Sep 2024வாஷிங்டன், கமலா ஹாரிசின் பிரச்சார குழுவுக்கு டிரம்பை விட கிட்டத்தட்ட3 மடங்கு அதிக நன்கொடை வந்துள்ளது.
-
இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க பெண் உயிரிழப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்
07 Sep 2024வாஷிங்டன், இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க பெண் பலியான சம்பவத்திற்கு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கண்டனம் தெரிவித்
-
விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்
07 Sep 2024திருப்பத்தூர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடந்தது.
-
சட்டசபை தேர்தலுக்கு பிறகு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
07 Sep 2024ஜம்மு, சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
த.வெ.க. மாநாடு தேதி ? நடிகர் விஜய் இன்று அறிவிப்பு
07 Sep 2024சென்னை, தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.