முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்சில் தீ விபத்து : 37 பேர் பலி

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

தாவோ : பிலிப்பைன்சில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் இறந்தனர்.

பிலிப்பைன்சில் உள்ள தாவோ நகரில் 4 அடுக்குமாடிக் கொண்ட வணிக வளாக கட்டிடம் ஒன்றின் 3-வது தளத்தில் தீப்பிடித்தது. உடனடியாக மற்ற தளங்களுக்கும் தீ பரவியது. இதில் 37 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கட்டிடத்தின் மேல் தளத்தில் ‘கால் சென்டர்’ ஒன்று உள்ளது. அந்த அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும். அங்கிருந்தவர்களில் பெரும்பாலோர் இறந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க கடுமையாக போராடியும் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்தது. தீவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து