முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: வரும் 12-ல் ஆஜராக சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

புதன்கிழமை, 6 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் நேரில் ஆஜராக சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.  இதே வழக்கில், நேற்றும் சி.பி.ஐ., முன் சிதம்பரம் ஆஜரானார்.  இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக வரும் 12-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து