முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்க 24 மணி நேர மொபைல் போலீஸ் சேவை: திரிபுரா மாநிலத்தில் அறிமுகம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

அகர்தலா: பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்குவதற்காக 24 மணி நேர மொபைல் போலீஸ் சேவையை திரிபுரா மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த சேவையை நேற்று திரிபுரா மாநில முதல்வர் விப்லவ் குமார் தேவ் அகர்தலா நகரில் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:
“திரிபுராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்குவதற்காகவும், நகரில் குற்றங்களைக் குறைப்பதற்காகவும் 24 மணி நேர மொபைல் போலீஸ் சேவையைத் தற்போது தொடங்கியுள்ளோம்.

பாஜக தலைமையிலான கூட்டணி அரசு, குற்றங்கள் நடைபெறாத மாநிலமாக திரிபுராவை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மொபைல் போலீஸ் சேவை மூலம், பொதுமக்கள் இருந்த இடத்திலிருந்தே போலீஸாருக்குத் தகவல் கொடுக்கலாம். புகாரையும் பதிவு செய்யலாம். அவர்கள் காவல் நிலையம் செல்ல வேண்டிய தேவையில்லை.

சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள். தகவல் தொழில்நுட்ப உதவியுடன் போலீஸார் இங்கு சிறப்பாக செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் நேரம் மீதமாவதுடன் குற்றங்களையும் விரைந்து தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து