முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள வெள்ளத்தால் வர்த்தகம் முடக்கம்

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
Image Unavailable

மழை வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பால் தமிகழகத்தில் பல்வேறு தொழில்கள் பாதிப்பைச் சந்தித்துள்ளன. தருமபுரி மாவட்டம் அரூர் கால்நடைச் சந்தை முடங்கி, வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரூர் அருகே சேலம் பிரதான சாலையில் செயல்படும் கோபிநாதம்பட்டி மாட்டுச்சந்தையில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஏரளமான மாடுகள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும். மழைவெள்ளத்தால் கேரளாவிற்கு போக்குவரத்து முடங்கியுள்ளதால் இந்த வாரம் கேரளாவில் இருந்து வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை.

இதனால் இந்த வாரம் சுமார் 60 லட்சம் ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோபிநாதம்பட்டி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மழை வெள்ளத்தால் கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இந்த ஆண்டு களைகட்டவில்லை. இதனால் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பூ வர்த்தகம் கடுமயாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து