எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் சந்திப்பதற்கு பாஜக உயர் நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பாஜக தேசிய செயற்குழுவின் 2 நாள் கூட்டம், தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசிய செயற்குழுக் கூட்டம் இதுவாகும்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம், அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அதில், பாஜகவின் தேசிய நிர்வாகிகளும், மாநிலத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தை தொடங்கி வைத்து அமித் ஷா பேசியதாவது:கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் வரலாற்றில் அது மிகப்பெரிய சாதனையாகும். அந்த தேர்தலைக் காட்டிலும், அடுத்த ஆண்டு (2019) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக மேலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும். அந்த வெற்றியை உறுதிசெய்வதற்காக, பாஜக தொண்டர்கள் அனைவரும் பாட வேண்டும்.அதுமட்டுமன்றி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவின் வெற்றிக்கு தொண்டர்கள் உழைத்திட வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் அந்தக் கூட்டத்தில், பாஜகவின் உள்கட்சித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கட்சியின் விதிமுறைப்படி, ஒருவர் தொடர்ச்சியாக 2 முறை தலைவர் பதவியை வகிக்கலாம்.கட்சியின் தலைவரான அமித் ஷாவின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தலும், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களும் நடைபெற இருப்பதால், உள்கட்சித் தேர்தலை நடத்துவதற்கு குறுகிய காலமே உள்ளது. எனவே, அமித் ஷா தலைமையிலேயே பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தேர்தல் வியூகம்: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ரூபாய் மதிப்பு சரிவு, தினந்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஆகியவை காரணமாக, மத்திய பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அண்மையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை நீர்க்கச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. அந்தச் சட்டம், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதையடுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், அரசின் இந்த நடவடிக்கை, சில சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்கள் சிலரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், தலித் மற்றும் பழங்குடியின மக்களையும், பிற ஜாதி மக்களையும் சமதானப்படுத்தி, அவர்களின் ஆதரவைப் பெற வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. தலித் சமூகத்தினரின் நம்பிக்கையைப் பெறவே, தில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், பாஜக தேசிய குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயக் கடனை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இத்தனை சவால்களையும் எதிர்கொண்டு அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தேசிய பொதுக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.