முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்சில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 1 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

மணிலா, பிலிப்பைன்சில் பெய்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 68 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில், கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து பெய்து வந்த மழை தீவிரமடைந்து, பேய் மழையாக மாறியது. இந்த நிலையில், அந்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில், ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேரழிவு மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்த மக்களுக்கு மழை வெள்ளம் பேரிடியாக அமைந்துள்ளது. போலீசார் மற்றும் அரசு அமைப்புகளை சேர்ந்த மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சில நாட்களுக்கு மழை தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து