எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : எதிர்க்கட்சிகளின் கற்பனை குற்றச்சாட்டிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'குட்டிக்கதை' கூறி ஆவேச பேசினார்.
சென்னை தீவுத் திடலில் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஒரு குட்டிக் கதை கூறி எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.
மதிக்காமல்...
ஒரு அடர்த்தியான காடு. அந்த காட்டில் நிறைய மிருகங்கள் வசித்து வந்தன. அந்த காட்டில் ஒரு பொந்தில் ஒரு முயல் ஒன்று வசித்து வந்தது. காட்டிலேயே இந்த முயல்தான் சற்று படித்த முயல். எனவே தனக்குத்தான் எல்லாம் தெரியும். இவர்கள் எல்லாம் படிக்காத முட்டாள் என்ற நினைப்பில் யாரையும் மதிக்காது. இந்த முயல் மற்ற முயல்கள் போன்றதல்ல. எப்பொழுதும் அசாதாரண கற்பனையிலேயே மிதக்கும், நடக்காத காரியங்களை எல்லாம் நடந்து விட்டதாக கருதும். எந்த நேரமும் ஏதாவது சிந்தித்தப்படியே இருக்கும். இந்த முயல் ஒரு நாள் வெகுதூரம் ஓடிய களைப்பில் ஒரு பனை மரத்தடியில் கண்களை மூடிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவாறு இருந்தது.
உயிருக்கு ஆபத்து...
அப்பொழுது ஒரு பனம் பழம் ஒன்று பொத்தென்று கீழே விழுந்தது. கண்களை முடியவாறு இருந்ததால், பனம் பழம் விழுந்ததை முயல் பார்க்கவில்லை. முயலின் சிந்தனை கலைந்தது. அது தன் ஆயுளில் இதுபோன்ற சத்தத்தை கேட்டதில்லை. உலகத்தை பற்றிய சிந்தனையில் இருந்ததால் ஒருவேளை உலகம்தான் புரண்டு விழுந்து விட்டதோ என்று நினைத்தது. இதனை நினைத்தவுடன் அதன் உடல் நடுங்கியது. இனி இங்கிருந்தால் நமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று நினைத்தவாறு தலை தெறிக்க ஓடியது.
சிங்கம் கேள்வி...
வேகமாக ஓடிய முயலை வழியிலுள்ள மிருகங்கள் பார்த்து ஏன் வேகமாக ஓடுகின்றாய்? என்று கேட்டன. அதற்கு அந்த முயல், உலகம் விழுந்து விட்டது. நாம் இங்கிருந்தால் ஆபத்து. அதனால் ஓடுகிறேன் என்றது. இதனைக் கேட்ட மற்ற மிருகங்களும் ஓட ஆரம்பித்தன. எல்லாம் சிங்கத்திடம் சென்று இது பற்றி தெரிவித்தன. உடனே சிங்கம் முயலைப் பார்த்து, நீ அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தாயா? என்று கேட்டது. நான் நல்ல வேளையாக கண்களை மூடிக் கொண்டிருந்தேன் என்றது முயல். எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது?அந்த இடத்தைக் காட்டு என்றது சிங்கம். உடனே முயல் தான் படுத்திருந்த பனைமரத்திற்கு அழைத்து சென்றது. இந்த பனை மரத்தடியில் இருக்கும்போது தான் உலகம் விழுந்தததை பார்த்தேன், என்றது.
பாடம் புகட்டுவார்கள்...
சிங்கம் அங்கே சுற்றும் முற்றும் பார்த்து அங்கே பனம் பழம் விழுந்திருந்ததை பார்த்தது. தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்ளும் முயல், பனம் பழம் விழுந்ததை உலகம் விழுந்ததாக கற்பனை செய்துக் கொண்டு உங்களையே குழுப்பி விட்டது. உலகம் விழவில்லை என்று சிங்கம் கூறியது. உண்மையை விளக்கிய சிங்கம், முயலின் அகங்காரத்தை ஒழிக்கும் வகையில் உரிய தண்டனை வழங்கியது. முயல் போன்று, மக்களை குழப்புவதற்காக எதிர்கட்சிகள் கூறும் கற்பனை குற்றச்சாட்டுக்களுக்கு, சிங்கம் போல் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். என்றார்.
பாராட்டுக்குரியது...
மேலும் அவர் பேசுகையில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை அம்மாவின் அரசு தடை செய்துள்ளது. இதற்கு பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த உயரிய கொள்கைக்கு இந்தப் பொருட்காட்சியில் முக்கியத்துவம் அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது பாராட்டுக்குரியது.
விளையாட்டு சாதனங்கள்
இந்த பொருட்காட்சியில் துபாயில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான கட்டடத்தின் மாதிரி வடிவம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம், மேக கூட்டங்களை பிரதிபலிக்கும் மாதிரி ஆகிய சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதுபோன்ற பயனுள்ள விஷயங்கள் மட்டுமின்றி, பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் இந்த பொருட்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள அண்ணா கலையரங்கத்தில் தினந்தோறும் நாட்டியம், நாடகம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டு சாதனங்கள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
முன்னோடி மாநிலமாக...
மக்களின் மன மகிழ்வுக்கு மூலக் கூறாகவும், வேலை வாய்ப்பினையும், அன்னியச் செலாவணியையும் ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாவை மேம்படுத்துதல், தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, புதிய சுற்றுலா மையங்களை தெரிவு செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் அரசு செயல்படுத்தி வருவதால், சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆன்மீகம் மற்றும் பொழுதுபோக்கும் சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் அமையப் பெற்றுள்ளன. யுனஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் ஐந்து தமிழ்நாட்டில் உள்ளன. ஆக மொத்தம் உலகின் பழமையான கலாச்சாரம், வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், பிரமிக்கத்தக்க கோயில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, மனதை வசீகரிக்கும் இயற்கைத் தோற்றங்கள், வனப்பகுதிகள் முதலியவை தமிழ்நாட்டில் உள்ளன. சிறந்த சாலை வசதிகள் மற்றும் நான்கு பன்னாட்டு விமான நிலையங்கள் இங்கு அமைந்துள்ளன.
தமிழகம் முதலிடம்
இதன்காரணமாக, 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேலும், 2017-ம் ஆண்டில் முனைப்பாக சந்தைப்படுத்தியதன் விளைவாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்து, தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேலும் 2017-ம் ஆண்டில் 34 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 48 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார