முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிவினைவாதிகள் பந்த்துக்கு அழைப்பு - காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால், காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மக்களவை தொகுதியில் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை புறக்கணிக்க கோரி பிரிவினைவாதிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர். பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹூரியத் கான்பரன்ஸ் தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து பிரிவினைவாதிகள் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். பிரிவினைவாதிகள் முழு அடைப்பு அழைப்பால், காஷ்மீரில் நேற்று இயல்பு வாழ்க்கை முடங்கியது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. எனினும் பாரமுல்லா தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து