முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது,

வளிமண்டல மேலடுக்கில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடரும் என்று தெரிவித்தார். மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. கடலூரில் 13 செ.மீ. மழையும், அரியலூரில் 12 செ.மீ. மழையும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 11 செ.மீ. மழையும், விழுப்புரத்தில் 10 செ.மீ., திருவாரூர், தஞ்சையில் தலா 8.செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து