முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோமுகி நதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

புதன்கிழமை, 6 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : விழுப்புரம் மாவட்டம் கோமுகி நதி அணையில் இருந்து வரும் 8-ம் தேதியில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி நதி அணையிலிருந்து 2019-2020-ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.  விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, விழுப்புரம் மாவட்டத்தில், பழைய பாசன நிலங்கள் 5,860  ஏக்கரும், புதிய பாசன நிலங்கள் 5000 ஏக்கரும், ஆக மொத்தம் 10860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு  கோமுகி நதி அணையிலிருந்து 8.11.2019 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.    மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து