முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனா வைரஸ் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 14-ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில், பல்வேறு தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.  இந்த வைரஸ் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக எடுக்க வேண்டி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்காக மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி இன்று  (6-ம் தேதி) காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் கானொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து