முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்களான எங்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது' 2016-ல் நடந்ததன் பின்னணியை பகிர்ந்த ரெய்னா

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2024      விளையாட்டு
5

Source: provided

சென்னை:10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 4- வது இடத்தில் உள்ளது. முன்னதாக எம்.எஸ். தோனி தலைமையில் 14 சீசன்களில் 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று 10 முறை பைனலில் விளையாடி 5 கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிகரமான ஐ.பி.எல். அணியாக சாதனை படைத்துள்ளது. ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கி 2 வருடங்கள் விளையாட தடை பெற்றது மட்டுமே சென்னையின் கெரியரில் மிகப்பெரிய கருப்புப்புள்ளியாக பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் அப்போது சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் உரிமையாளர்கள் தான் பெட்டிங்கில் ஈடுபட்டவர்களே தவிர அணியும், வீரர்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டது. அதனால் எந்த தவறும் செய்யாத சிஎஸ்கே வீரர்கள் 2016, 2017 சீசனில் புதிதாக உருவாக்கப்பட்ட புனே மற்றும் குஜராத் அணிகளுக்காக விளையாடினார்கள். குறிப்பாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ். தோனி புனே அணிக்காகவும் சுரேஷ் ரெய்னா குஜராத் அணிக்காகவும் கேப்டனாக செயல்பட்டனர். 

இந்நிலையில் சி.எஸ்.கே. அணி 2 வருடங்கள் தடைப் பெற்றது பற்றி சுரேஷ் ரெய்னா சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. வீரர்களான எங்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது. 2016-ல் நான் குஜராத் அணிக்கு சென்றேன். தோனி புனே அணிக்காக சென்றார். அந்த விவகாரத்தில் நடந்தது எதுவாக இருந்தாலும் அது அணிகளின் உரிமையாளர்களுக்கு இடையே நடந்திருக்க வேண்டும். ஆனால் வீரர்களான எங்களுக்கு எதுவும் தெரியாது.ஒவ்வொரு போட்டி நடைபெறும்போதும் எங்களுடைய மொபைல் போன்கள் வெளியே வைக்கப்படும். எனவே வீரர்களான எங்களால் எதுவும் செய்ய முடியாது. 

இந்தியாவில் ஊழல் தடுப்பு என்பது மிகவும் வலுவானது. நீங்கள் அதை நினைத்து கூட பார்க்க முடியாது. ஏனெனில் நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டும். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட ராஜஸ்தான் வீரர்கள் மீதும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து