எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று பகல் 11 மணிக்கு டெல்லி சிறிகோட்டை அரங்கில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது,
இந்தியாவின் மிகச் சிறந்த நட்பு நாடு அமெரிக்காதான் என்று நான் நம்புகிறேன். சமீப ஆண்டுகளில் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா மட்டுமே வறுமையில் இருந்து ஏராளமான மக்களை மீட்டுள்ளது.ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்களிப்பை அமெரிக்கா வரவேற்கிறது. இந்த பிராந்தியத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்.
அணுசக்தி துறையில் இந்தியாவின் உண்மையான நல்ல நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியா கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. இதை அமெரிக்கா வரவேற்கிறது. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுக்கும்.
பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா போன்ற நாடுகள் சுத்தமான எரிபொருளுக்கு மாற வேண்டியது அவசியமாகும். அணு ஆயுதங்கள் இல்லாத உலகை ஏற்படுத்துவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.ஒரு நாட்டில் பெண்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அந்நாட்டின் வளர்ச்சி அமையும். பெண்கள் வெற்றி பெற்றால், அந்த நாடே வெற்றி பெறும்.நாட்டில் பல மதங்கள் இருக்கலாம்.
ஆனால் அவற்றின் இலக்கு ஒன்றுதான். இந்தியாவில் பல மதங்கள் இருந்தாலும், எந்த மதச்சார்பின்மையும் இல்லாத விஷயத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. உலகிலேயே தான் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இந்த இளைஞர் சமுதாயத்தை உரிய முறையில் பயன்படுத்தும் போது நமது நாடுகள் மேலும் வலிமை பெறும்.இந்தியாவில் இருந்து நிறைய இளைஞர்கள் அமெரிக்கா வருகிறார்கள்.
ஆனால் இந்திய இளைஞர்கள் அமெரிக்கா நோக்கி வருவதை விட அமெரிக்க இளைஞர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். இந்தியர்கள் தொடர்ந்து அமெரிக்கா வருவதை நான் வரவேற்கிறேன். இந்தியர்கள் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. இந்தியாவுடன் நட்புறவை மேம்படுத்துவதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். இந்தியாவில் டீ விற்ற மோடி பிரதமராகி உள்ளார்.
சமையல்காரரின் பேரனான நான் அமெரிக்க ஜனாதிபதியாகி இருக்கிறேன். உலகில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மட்டுமே இதுபோன்று நடப்பது சாத்தியமாகும்.நமது இரு வரலாறு வேறு வேறாக இருக்கலாம். ஆனால் நமது சிந்தனைகள் ஒன்றுதான்.அமெரிக்கர்களும், இந்தியர்களும் மிகச் சிறந்த உழைப்பாளிகள் வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலமாக உள்ளது.இந்தியாவில் பல மதங்கள் உள்ளன.
ஆனால் கடவுளின் கண்ணுக்கு நாம் அனைவரும் சமம்.இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முதல் அதிபர் என்பதால் அதை நினைக்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. இந்தியா எனக்கு இந்த கவுரவத்தை கொடுத்துள்ளது.இந்தியாவில் இருந்து வந்த விவேகானந்தரை 150 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா வரவேற்று உபசரித்தது. அவர்தான் அமெரிக்காவுக்கு யோகாவை கொண்டு இந்தியாவின் கூட்டாளியாக அமெரிக்கா திகழ்கிறது.எனவே இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்கும்.
இது இரு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.உள் கட்டமைப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது. அது போல பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும்.அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்திருந்தால், இந்த உலகம் என்றென்றும் பாதுகாப்புடன் இருக்கும். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் எங்களை பல வழிகளில் பலப்படுத்தியுள்ளனர்.
அது போல இங்கு உள்நாட்டில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் கொடுத்து இருக்கிறீர்கள். இதன் மூலம் ஜனநாயகத்தை பேணுவதில் இந்தியா, உலகின் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.வாழ்வில் நான் பல தடவை, என் நிறம் காரணமாக வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளேன். நான் கிறிஸ்தவன் அல்ல முஸ்லிம் என்று கூட வதந்தி கிளப்பினார்கள்.ஆனால் நான் பொறுமையை கைக்கொண்டேன்.
அதில்தான் மதத்தின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.பெண்களுக்கு நாம் எல்லா உரிமைகளையும் கொடுக்க வேண்டும். நான் மிகவும் மன உறுதி கொண்ட, தைரியமான பெண்ணை திருமணம் செய்து இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம்.நான் தவறு செய்யும் போது என் மனைவி மிச்செல், அதை தட்டிக் கேட்க தவறுவதே இல்லை. இது அடிக்கடி நடக்கும்.எங்களுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நான் அழகான, வலிமையான பெண்ணால் சூழப்பட்டுள்ளேன். மிச்செல் என்னை விட மிகவும் நன்றாக நடனம் ஆடுவார்.
அவர் அளவுக்கு என்னால் ஆட முடியாது. இது எனக்கு சில சமயம் கஷ்டமாகக் கூட இருக்கும்.எனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட ஆசையாக உள்ளது. ஆனால் எனது சீக்ரெட் சர்வீஸ் படையினர் அதற்கு என்னை அனுமதிப்பதே இல்லை. இந்திய குடியரசு தின விழாவில் மோட்டார் சாகசம் செய்யப்பட்டது போல எனக்கும் செய்ய வேண்டும் போல உள்ளது.ஒரு பெண் தலைமையில் எனக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை தரப்பட்ட போதும், முப்படை அணிவகுப்பில் பெண்கள் அணிவகுத்ததை பார்த்த போதும் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
செனோரிட்டா... படே படே தேஷோன் மெய்ன்.... நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும் (இது தில்வாலே துல்ஹனியா படத்தில் நடிகர் ஷாருக்கான் பேசும் வசனம்).இந்தியா மதத்தின் அடிப்படையில் பிரியாத வரை தொடர்ந்து வெற்றிகளை பெறும். எல்லா இந்தியர்களும் சினிமாவுக்கு போகிறார்கள். ஷாருக்கான் நடிப்பை கை தட்டி ரசிக்கிறார்கள்.
தடகளத்தில் மில்கா சிங் சாதித்தபோது எல்லா இந்தியர்களும் கைதட்டி வரவேற்றீர்கள். இந்த உணர்வு உள்ளவரை இந்தியா தொடர்ந்து வெற்றி பெறும். இவ்வாறு ஒபாமா பேசினார். சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட அரங்கில் ஒபாமா பேசத் தொடங்கியதும் ‘‘நமஸ்தே’’ என்று கூறினார். பேச்சை முடிக்கும் போது, ‘‘பகுத் தனியாவத் (மிக்க நன்றி) என்று கூறினார்.பிறகு பார்வையாளர்கள் பக்கம் சென்று கையசைத்தார். சிலருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது லகான் படத்தில் வரும் ‘‘ஓ... மித்வா...’’ பாடல் ஒலிபரப்பானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.