முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளல்

வியாழக்கிழமை, 5 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

பழனி - பழனியில் தைப்பூச திருவிழாவின் 8ம் நாளன்று அருள்மிகு முத்துக்குமாரசுவாமி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
 
பழனியில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திங்களன்று திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டமும், செவ்வாயன்று தைப்பூச திருத்தேரோட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில் 8ம் நாள் நிகழ்ச்சியாக மலை அடிவாரம் சேதுபதி மண்டபத்துக்கு தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமி, இரவு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்தார்.

முன்னதாக வையாபுரி கண்மாயில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியை தம்பதி சமேதராக சுவாமி கண்டுகளித்தார். நேற்று தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று தெப்பத்தேர் உலா நடைபெறுகிறது. இரவு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. முன்னதாக புதன்கிழமை மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்திருந்தனர். மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் காவடியுடன் ஆடிப்பாடி வலம் வந்தனர். சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் நீடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து