எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிஸ்பேன் - உலகக் கோப்பை லீக் போட்டியில் ஜிம்பாப்வேவிடம் கடைசி வரை போராடி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான்.இந்த உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவுடன் தோல்வியுடன் சோகமாக தொடங்கியது பாகிஸ்தான். இந்தியாவை இதுவரை உலகக் கோப்பையில் வென்றதில்லை என்ற பெயரும் அது தக்க வைத்துக் கொண்டது. ஆனால் 2வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளிடம் மிக மோசமான தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் பி பிரிவில் தனது 3வது போட்டியாக, ஜிம்பாப்வே அணியைச் சந்தித்தது பாகிஸ்தான். டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது பாகிஸ்தான். ஆனால் ஜிம்பாப்வே வீரர்களின் பந்து வீச்சில் ஆடி போனது பாகிஸ்தான். அதிரடியாக ரன் குவிக்கவே விடவில்லை ஜிம்பாப்வே வீரர்கள். அடுத்தடுத்து விக்கெட்களும் விழுந்தபடி இருந்தது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் 200 ரன்களையாவது தாண்டுவார்களா, 50 ஓவர்கள் முழுமையாக ஆடுவார்களா என்ற சந்தேகம் வந்து விட்டது.
ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் ரன் குவிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். இதனால் கட்டையைப் போட்டபடி ஆடினர். தெண்டாய் சத்தாராவின் பந்து வீச்சில் 3 முக்கிய பாகிஸ்தான் வீரர்கள் வீழ்ந்தனர். சத்தாரா 35 ரன்களை மட்டுமே கொடுத்து பாகிஸ்தானை நிலை குலைய வைத்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் நசீர் ஜாம்ஷெட் 1, அகமது செஷாத் ரன் எதுவும் எடுக்காமலும் வீழ்ந்தனர். முதல் இரு ஓவர்களிலேயே இவர்கள் வெளியேரி விட்டனர். கேப்டன் மிஸ்பா உல் ஹக்கோ கட்டை வீரராக மாறி சரமாரியாக கட்டையைப் போட்டார். ரன் எடுக்கவே பல நேரங்களில் இவர் முயற்சிக்கவில்லை. காரணம் விக்கெட்டை காப்பாற்ற. ஆனால் மறு முனையில் விக்கெட்கள் சாய்ந்தவண்ணம் இருந்தன.
முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெறும் 14 ரன்களை மட்டுமே சேர்த்து மிகக் கேவலமான நிலையில் இருந்தது. அந்த அளவுக்கு கட்டையைப் போட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் மிக மோசமான பேட்டிங் இதுதான். ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடியைக் காட்டவே முடியவில்லை பாகிஸ்தானால். இருப்பினும் மிஸ்பா உல் ஹக்கின் ஆட்டம், (121 பந்துகளில் 73 ரன்கள்), உமர் அக்மல்லின் 33 ரன்கள், ஹாரிஸ் சொஹைலின் 27 ரன்களும் அணியை சற்றே நிமிர வைத்தது.
இருப்பினும் கடைசி நேரத்தில் பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் குவித்த 54 ரன்கள்தான் பாகிஸ்தானின் கெளரவத்தைக் காக்க உதவியது. மிஸ்பா, 3வது விக்கெட்டுக்கு ஹாரிஸ் சொஹைலுடன் இணைந்து 54 ரன்களையும், 4வது விக்கெட்டுக்கு உமர் அக்மல்லுடன் 69 ரன்களையும் சேர்த்தார்.ஷாஹித் அப்ரிதிக்கு நேற்று 35வது பிறந்த நாளாகும். எனவே அவர் அதிரடி காட்டலாம் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஏமாற்றி விட்டார். 3 பந்துகளே அவர் நீடித்தார்.
அடுத்து ஆட வந்த ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டம் சரிவரவில்லை. இதுவரை எந்த போட்டியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாத வேகப் பந்து வீச்சாள் முகம்மது இர்பான் இந்த முறை அடுத்தடுத்து முதல் 3 விக்கெட்களையும் சாய்த்தார்.சமு சிபபா 9 ரன்களில் வீழ்ந்தார். சிக்கந்தர் ரஸா 8 ரன்களில் போனார். ஹாமில்டன் மஸ்கட்ஸா சற்றுப் போராடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவர்கள் விறுவிறுவென வீழ்ந்த நிலையில் பிரண்டன் டெய்ரும், சீன் வில்லியம்ஸும் போராட்டத்தில் குதித்தனர். டெய்லர் பிரமாதமாக ஆடிய நிலையில் சீன் வில்லியம்ஸ் அதிரடியாக ஆடினார். டெய்லர் 72 பந்துகளில் 50 ரன்களைத் தொட்ட நிலையில், வஹாப் ரியாஸ் பந்தில், மிஸ்பா உல் ஹக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். மறு முனையில் போராடிய சீன் வில்லியம்ஸ், 32 பந்துகளில் 33 ரன்களைக் குவித்து ரஹத் அலி பந்தில் வீழ்ந்தார். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்துதான் பாகிஸ்தான் தரப்புக்கு நம்பிக்கை பிறந்தது.
ஜிம்பாப்வேயின் நம்பிக்கையும் தகர்ந்தது.
அதன் பின்னர் போராட்டம் கிரேக் எர்வின், சாலமோன் மைரிடம் வந்தது. ஆனால் மைர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை இர்பான் வெளியேற்றினார். அவர் போன அடுத்த சில நிமிடங்களில் எர்வின் வெளியேறினார். அவரை வஹாப் ரியாஸ் 14 ரன்களில் வெளியேற்றினார். வெற்றி இலக்கை அழகாக துரத்தி வந்த ஜிம்பாப்வே பரிதாபமாக கடைசி நேரத்தில் விக்கெட்களைப் பறி கொடுத்ததால் வெற்றித் துரத்தலை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
இருப்பினும் சிகும்பராவும், பன்யங்கராவும் கடைசி வரை விடாமல் வெற்றித் தேடலைத் தொடர்ந்தது பாகிஸ்தானியர்களுக்கு நல்ல பாடமாக அமைந்தது. இருவரும் கடைசி பந்து வரை விடாமல் போராடினர்.
கடைசி இரு ஓவர்களில் 28 ரன்களை எடுக்க வேண்டிய நிலை. ஆனால் 49வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை ரன்களாக மாற்றத் தவறியது ஜிம்பாப்வே. நான்காவது பந்தில் ஒரு சிங்கிள் கிடைத்தது. 5வது பந்தில் 2 ரன்கள் வந்தன. கடைசிப் பந்தில் ஒரு ரன்.50வது ஓவரில் 24 ரன்களை எடுக்க வேண்டும் என்ற கடினமான நிலைக்கு வந்து சேர்ந்தது ஜிம்பாப்வே. முதல் பந்து ரன்னாக மாறத் தவறியது. 2வது பந்தில் 3 ரன்களை எடுத்தது ஜிம்பாப்வே. 3வது பந்தில் மாவீரன் சிகும்பரா பரிதாபமாக ஆட்டமிழந்தார்.
சிகும்பரா. 34 பந்துகளில் 35 ரன்களக் குவித்த சிகும்பரா, பன்யங்கராவுடன் இணைந்து 47 ரன்களைச் சேர்த்து வெளியேறினார். இறுதி வரை போராடிய பன்யங்கராவும் அடுத்து ரன் அவுட் ஆக ஜிம்பாப்வே அணி 49.4 ஓவர்களில் 215 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்தது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் தரப்பில் முகம்மது இர்பானும், வஹாப் ரியாஸும் தலா 4 விக்கெட்களைச் சாய்த்தனர். ரஹத் அலிக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பெற்றுள்ள முதல் வெற்றி இதுதான். அதுவும் கூட கடுமையாக போராடியதால் கிடைத்த வெற்றியாக மாறியிருப்பது பாகிஸ்தான் ரசிகர்களை வெறுப்படையவே வைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.