முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் புதிய முதல்வரின் சர்ச்சை பேச்சு: பாஜக விளக்கம்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

ஜம்மு - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமூகமான முறையில் தேர்தல் நடந்ததற்கு பாகிஸ்தானும், பயங்கரவாதிகளுமே காரணம் என்றும், அவர்கள் ஏதாவது செய்திருந்தால் தேர்தலை அமைதியாக நடத்தியிருக்க முடியாது. தேர்தலை சீர்குலைப்பதற்கு சிறிய அளவிலான நடவடிக்கையே போதும் என்று அந்த மாநில புதிய முதல்வர் முப்தி முகமது சயீது தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவரது பேச்சு பற்றி கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவம், தேர்தல் ஆணையம், இந்திய அரசமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் தங்கள் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல விரும்புவதால் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்புகிறார்கள்.  அவர்களின் விருப்பங்களை புதிதாக பொறுப்பேற்றுள்ள மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி அரசு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் வாயிலாக நிறைவேற்ற முயற்சி செய்யும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து