முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையான் கோயிலில் ரூ.2.92 கோடி காணிக்கை

திங்கட்கிழமை, 9 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி - திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் ரூ. 2.92 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இலவச தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் 6 அறைகளில் தங்கி இருந்தனர். இவர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைப்பாதையில் வந்த பக்தர்கள் 2 அறைகளில் காத்திருந்து 3 மணி நேரத்திற்கு பிறகும் ரூ. 300, ரூ. 50 மற்றும் ஆன்லைன் டிக்கெட் எடுத்து வந்த பக்தர்கள் ஒரு மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். இதன்படி 81 ஆயிரத்து 192 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த 2 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில் ரூ. 2 கோடியே 92 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து