முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

 சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த 10–ந்தேதி அணையில் 1600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பூண்டி ஏரிக்கு 395 கனஅடி தண்ணீர் வந்தது. இது தற்போது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.சென்னையில் கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க 1.7 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் என்று ஆந்திர அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கண்டலேறு அணையில் தற்போது 9.5 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் உள்ளது. 8 டி.எம்.சி. இருக்கும் வரை தண்ணீர் திறந்து விடமுடியும் என்பதால் 1.7 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து விடும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இப்போது பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் மொத்தம் 2229 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் 2938 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் முழுவதும் கிருஷ்ணா தண்ணீர் வந்தால் குடிநீர் தட்டுப்பாட்டை எளிதில் சமாளித்து விடமுடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து