முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் நிலநடுக்கம்: 5 பேர் பலி

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா: பீகார் மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகினர். நேபாளத்தில் நேற்று காலை பயங்கர பூகம்பம் ஏற்ப்பட்டது. இதனையடுத்து இந்தியா, வங்கதேசம் உள்ளிட்டப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

பீகார் மாநிலத்தில் பாகல்பூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவரும். சீதாமாரி, தார்பாங்கா, வைஷாலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகினர். நிலநடுக்கம் ஏற்ப்பட்டதால் தொலைபேசி, மின்சார சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை வாரிய செயலர் பியாஸ் ஜி கூறும்போது,
பாட்னா, கயா, சீதாமாரி, நாலந்தா, பக்சார், பூர்னியா, பெகுசராய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து