எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தமிழகத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு நேற்று மூன்றாவது நாளாக பார்வையிட்டனர். வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வந்த ஆய்வுக்குழுவினர் அம்மா உணவகத்தில் உணவு உட்கொண்டனர். முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய நிலவேம்பு குடிநீர் வாங்கி அருந்தினர்.,
தமிழகத்தில் அண்மையில் கொட்டித் தீர்த்த வடகிழக்குப் பருவமழையால் கடலூர் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இம்மாவட்டங்களில், உடனடி நிவாரணப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு சேதங்களை விரைந்து சீரமைக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, இப்பணிகளுக்கென உடனடியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி, நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஜெயலலிதா, வெள்ள சேதங்களை முழுமையாக சீரமைக்க, முதற்கட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் 8,481 கோடி ரூபாய் தேவை என்றும், உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், தமிழகத்திற்கு, முதற்கட்டமாக 939 கோடியே 63 லட்சம் ரூபாயை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தபடி, வெள்ளச்சேத பகுதிகளைப் பார்வையிட, தமிழகத்திற்கு மத்தியக்குழு , கடந்த 26 ம்தேதி வந்தனர். . உள்துறை இணைச் செயலாளர் டி,வி.எஸ்.என். பிரசாத் தலைமையிலான 9 பேர் கொண்ட ஆய்வுக்குழு, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து. ஆலோசனை நடத்தினர். வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு, மத்திய அரசு உடனடியாக நிதியுதவி வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்தியக் குழுவை முதலமைச்சர் ஜெயலலிதா, கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளச் சேத பகுதிகளை மத்தியக் குழு, பார்வையிட்டார். மூன்றாவது நாளான நேற்று திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வடசென்னை பகுதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. வடசென்னை தண்டையார்பேட்டை பகுதியில் சேணியம்மன் கோயில் தெரு தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து , மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தது. நிவாரண முகாமில் தங்கி இருந்த பொது மக்களையும் மத்திய குழுவினர் சந்தித்து பேசினார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் நிவாரண உதவிகள் பற்றி கேட்டறிந்தனர்.
நிவாரண முகாமில் தங்கி இருந்த மாரியம்மாள் மத்திய குழுவினரிடம் கூறுகையில், கைலாச முதலி தெருவில் குடியிருக்கிறோம். அங்கு வெள்ளம் புகுந்ததால் பள்ளியில் தங்க வைக்கப்பட்டோம். முதல்–அமைச்சர் வந்து எங்களை பார்த்தார். அதிகாரிகளும் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்தனர். இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் நாங்கள் வீடு திரும்பினோம். இனி மழை காலங்களில் வெள்ளம் தேங்காதவாறு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்றார்.
இதுபோல் அங்கு தங்கி இருந்த பல பெண்களும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். நிவாரண முகாமில் செயல்படும் மருத்துவ முகாமையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இளைய முதலி தெருவை பார்வையிட்டனர். அங்கு ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கழிவுநீர் லாரியை பார்த்ததும் அதன் செயல்பாடுகளை சிறிது நேரம் நின்று பார்வையிட்டனர். வ.உ.சி. நகர் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கும் சென்று பார்வையிட்டனர்.
மழை வெள்ள நீர் அகற்றம் - அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த புகைப்படங்களை மத்தியக்குழு பார்வையிட்டது. மேலும், தண்டையார்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்ட மத்தியக் குழு, உணவு தயாரிப்பு முறைகளைக் கேட்டறிந்தது. அங்கு வழங்கப்பட்டு வரும் நிலவேம்பு குடிநீரை மத்தியக்குழுவினர் ஆர்வத்துடன் வாங்கி அருந்தினர்.
அதனைத் தொடர்ந்து, கைலாசன் தெரு, இளைய தெரு உள்ளிட்ட இடங்களில் வெள்ளச் சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர், அங்குள்ள மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அங்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி அமைக்கப்பட்டிருந்த நடமாடும் மருத்துவ முகாமில் அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இதன்பின்னர் மத்தியக் குழு, கார்கில் நகர், சடையான் குப்பம், தட்டாமாஞ்சில் ஆகிய பகுதிகளை பார்வையிட்டது. அப்போது நிருபர்களிடம் பேசிய மத்திய குழுத் தலைவர் பிரசாத், தங்களது ஆய்வறிக்கையை ஒரே வாரத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.