எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். ‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ எனப் புகழப்படுகிறது, சென்னை மயிலாப்பூரில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கபாலீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம், அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்ட தலம், முருகப்பெருமான் சிக்கல் தலத்தைப் போல வேல் பெற்ற தலம், பிரம்மன் தன் ஆற்றலை திரும்பப் பெற்ற தலம், ராமன், சுக்ரன் வழிபட்டு பேறு பெற்ற கோவில், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தேவாரப் பதிகம் பாடல் பெற்ற 274 சிவஸ்தலங்களில் 257-வது கோவிலாகும். தொண்டை நாட்டுத் தலங்களில் இத்தலம் 24-வது திருத்தலமாகவும் அமைந்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த இந்த கோவில், திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் நிறைவடைந்து, இந்த ஆண்டு (2016) மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் (மார்ச்) 25-ம் தேதி பந்தக்கால் நடுவது, விக்னேஸ்வர பூஜை, கும்பாபிஷேக லக்ன பத்திரிகை வாசித்தல் ஆகியவையும் ஹோமங்கள் வாஸ்து சாந்தி பூஜை, ஆச்சாரியார்கள் பூஜையும் நடைபெற்றது. முதல்கால யாகசாலை பூஜைகள் 28-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் காலை 5.30 மணி வரை 12 கால யாக பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை 8 மணிக்கு யாகசாலையில் இருந்த கலசங்களை சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க கோவில் உட்புற பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் சரியாக காலை 8.50 மணிக்கு அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முக மணி கொடி அசைக்க ராஜ கோபுரம், கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் விமானம், சிங்காரவேலர், விநாயகர் என 19 விமான கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கலசத்தில் உள்ள புனித நீரை சிவாச்சாரியார்கள் கும்பங்களில் ஊற்றி அபிஷேகம் செய்தார்கள். பின்னர் கும்பத்திற்கு தீப ஆராதனை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘‘கபாலீஸ்வரா கற்பாகாம்பாள் தாயே’’ ‘ஓம் நமச்சிவாயா சிவாய நம’ என பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பி கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். பக்தர்கள் மீது கும்பாபிஷேக தீர்த்தும் தௌிக்கப்பட்டது. ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பைப் மூலமாகவும் புனித தீர்த்தம் பக்தர்கள் மீது பீய்ச்சி அடிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண கோவிலின் 4 மாட வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
மாட வீதிகளில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பக்தர்கள் பார்ப்பதற்கு வசதியாக பெரிய எல்.இ.டி. டி.வி. வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலும் ஏராளமான பேர் நின்று கும்பாபிஷேகத்தை பார்த்தார்கள். முதியோர் வர பேட்டரி கார்கள்கும்பாபிஷேகத்தை காண வரும் முதியோருக்காக, வடக்கு மாடவீதி இந்தியன் வங்கி அருகில் இருந்து, கோவிலுக்கு வர இரண்டு பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன.
கோயிலை சுற்றி உள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இதனால் பக்தர்கள் சிரமமின்றி கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். பல்வேறு இடங்களில் பாதுகாப்பு தடுப்புக்களும் அமைக்கப்பட்டிருந்தது. நான்கு மாட வீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, 26 சிசிடிவி கேமிராக்கள் மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டனர். ஆங்காங்கே ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தையடுத்து கபாலீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேக நிகிழ்ச்சியில் பல்வேறு கோவில்களின் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல், அப்பல்லோ மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் ப்ரீதா ரெட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவிலின் இணை ஆணையர் காவேரி தலைமையில் பணியாளர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.கும்பாபிஷேகத்தை பார்க்க வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் மயிலாப்பூருக்கு இயக்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.