எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஒரே ஆண்டில் 37 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூலம் 16 லட்சம் பேர் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக கவர்னரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான வித்யாசாகர்ராவ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சரும், இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
இடம் ஒதுக்கி தந்த முதல்வர்
எல்லோருக்கும் எப்போதும் உயர்கல்வி என்ற தொலை நோக்கு சிந்தனையுடன் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தினை தோற்றுவித்தவர் முதல்வர் ஜெயலலிதா. சென்னையின் மையப்பகுதியில் இடம் ஒதுக்கி தந்து அதற்கென தனிவளாகம் அமைத்து தந்து திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு மகுடம் சூட்டியவர் முதல்வர் ஜெயலலிதா. தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் தொலைநிலைக் கல்விப் பாடத்திட்டத் திட்டங்களை ஒரே மாதிரியான தரத்தில் நெறிப்படுத்தி வழங்க கூடிய பொறுப்பினை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்திடம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7 லட்சம் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்று வருகின்றனர்.
மேலை நாடுகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்போர் எண்ணிக்கை மிக அதிகம். மருத்துவர்கள், பொறியாளர்கள், பொருளாதாரத்துறையினர், அறவியல் துறையினர் என்று அனைவரும் தங்களின் அறிவு விரிவாக்கத்திற்கு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தினையே நாடுகின்றனர். அந்த வகையில் பிரிட்டிஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது. அப்படிப்பட்ட அடையாளத்ததை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் பெற வேண்டும்.
மாணவர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் வேலை வாய்ப்பினைப் பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சியும், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியும், மென்திறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் எளிதில் வேலையை பெற முடியும். கடந்த ஆண்டு மட்டும் 37 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூலம் 15.95 லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். மோட்டார் வாகனத் தயாரிப்பு மற்றும் அது சார்ந்த உதிரி தொழில்களில் மட்டும் 2017க்குள் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என அவர் பேசினார்.
சாந்தா புகழாரம்
இந்த பட்டமளிப்பு விழாவில் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் சாந்தா பேருரையாற்றி பேசும்போது., தமிழகத்தில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கு தரமான உயர்கல்வியை வழங்குவதற்காக 2002-ம் ஆண்டில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. அதில் தொழில் திறன் சார்ந்த பல்வேறு படிப்புகளை வழங்கியதன் மூலம் பெருமளவிலான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அதற்காக தமிழக அரசுக்கும், பல்கலைக் கழகத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
முதல்வருக்கு பாராட்டு
முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் பல புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு நிதியுதவி, சிறப்பு வகுப்பறைகள், மொழி ஆய்வகங்கள், கலைத்திட்ட மேம்பாடுகள், ஊட்ட சத்துடன் கூடிய மதிய உணவுத் திட்டம், சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உதவித்தொகை, வெளிநாடுகளில் பயிலும் வாய்ப்புகள் என எத்தனையோ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும் புத்கதம், தேர்வு, விளையாட்டு என்பதோடு வெறுமனே கற்பிக்கும் இடம் மட்டுமாக இருக்காமல், உங்கள் திறன் வளர்க்கும் மையங்களாவும் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
14,060 பேருக்கு பட்டம்
இந்த பட்டமளிப்பு விழாவில் 3,522 முதுகலைப்பட்டமும், 7,659 இளங்கலைப் பட்டமும், 2,725 பட்டயமும், 154 முதுநிலை பட்டயமும் என 14 ஆயிரத்து 60 பேருக்கு வழங்கப்பட்டன. இவர்களில் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்ற 142 பேருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை தமிழக ஆளுர் வித்யாசாகர்ராவ் வழங்கினார். அதேபோல், கனடாவில் உள்ள காமன்வெல்த் கல்விக் கழகத்தின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப பாடத்திற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் 25 ஆயிரம் பரிசுத் தொகையை இளநிலை கம்ப்யூட்டர் பயன்பாடு பாடத்தை படித்த மாணவி முத்துவுக்கு வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்:கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
06 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.